Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
முகத்திற்கு சோப்பு பயன்படுத்தினால் சருமம் ரொம்ப வறண்டு போகுதா? அப்ப இந்த பொருட்களை யூஸ் பண்ணுங்க..
சருமத்தில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு கெமிக்கல் கலந்த சோப்பு, ஃபேஸ் வாஷ் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கலாம்.
நாம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், முகத்தில் உள்ள அழுக்கை நீக்க சோப்பு அல்லது ஃபேஷ் வாஷைப் பயன்படுத்துவோம். ஆனால் இந்த சோப்பு மற்றும் ஃபேஷ் வாஷ் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா? அப்படியெனில் சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய்கள் போன்றவற்றை எப்படி நீக்குவது என்று நீங்கள் கேட்கலாம். சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கெமிக்கல்கள் கலந்த பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரிப்பதைத் தவிர்த்து, இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு கெமிக்கல் கலந்த சோப்பு, ஃபேஸ் வாஷ் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கலாம். இப்போது அந்த நேச்சுரல் கிளின்சர்களைப் பார்ப்போம். இந்த கிளின்சர்களைப் பயன்படுத்தினால் சருமம் எப்போதும் பொலிவாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

பால்
சருமத்தில் உள்ள அழுக்கைப் போக்க உதவும் ஒரு பொருள் தான் பால். அதுவும் கொழுப்புள்ள பாலைக் கொண்டு சருமத்தை சுத்தம் செய்யும் போது, சருமம் நன்கு ஈரப்பதத்துடன் இருக்கும். அதற்கு காய்ச்சாத பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

ஓட்ஸ்
ஓட்ஸ் சருமத்தில் உள்ள அழுக்கை திறம்பட நீக்க உதவும். அதற்கு ஓட்ஸ் பொடியை நீர் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.

தேன்
தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது மற்றும் இது நல்ல மாய்ஸ்சுரைசராகவும் செயல்படுகிறது. இது தவிர, தேன் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கவும் உதவுகிறது. அதற்கு தேனை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 2 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

எலுமிச்சை
எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்களுக்கு எலுமிச்சை ஒரு நல்ல கிளின்சர். மேலும் எலுமிச்சை சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை பாலில் அல்லது தயிரில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 2 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

சர்க்கரை
சர்க்கரையும் சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்க உதவும். அதற்கு சர்க்கரையை நீரில் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக சர்க்கரையை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, அளவுக்கு அதிகமாக அழுத்தி தேய்க்க வேண்டாம். இல்லாவிட்டால் எரிச்சலை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications