Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
உங்க சருமத்துல எப்பவும் எண்ணெய் வழியுதா? தக்காளி ஒன்னு போதும் அத நிறுத்த...!
சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயின் காரணமாக சருமம் மந்தமாகவும் பருக்களுடனும் காட்சியளிக்கிறது. எனவே உங்கள் எண்ணெய் சருமத்திற்கு சிகிச்சையளிக்க தக்காளி ஒரு சிறந்த தீர்வாக அமையும்.
சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயின் காரணமாகச் சருமம் மந்தமாகவும், பருக்களுடனும் காட்சியளிக்கிறது. எனவே உங்கள் எண்ணெய் சருமத்திற்கு சிகிச்சையளிக்க தக்காளி ஒரு சிறந்த தீர்வாக அமையும். தக்காளியில் உள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்பு சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும்.

இது சருமத்திலிருந்து அசுத்தங்கள் மற்றும் நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும் தக்காளி சருமத்தில் உள்ள pH அளவை சமநிலைப் படுத்துகிறது. எனவே தக்காளியைப் பயன்படுத்தி எவ்வாறு வீட்டிலேயே உங்கள் எண்ணெய் சருமத்திற்குத் தீர்வு காணலாம் என்று பார்க்கலாம்.

சர்க்கரை
சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்குச் சர்க்கரை மற்றும் தக்காளி கலந்த ஸ்க்ரப் உங்களுக்கு உதவும். ஒரு தக்காளியை எடுத்து அரைத்து பேஸ்ட்டாக மாற்றி அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின்னர் முகத்தினை நன்றாகக் கழுவி கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள்.

தேன்
தக்காளி மற்றும் தேன் கலந்த கலவை முகத்தில் தோன்றும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள் முகப்பருக்களை அகற்ற உதவும். ஒரு தக்காளியை எடுத்து அரைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம்.

எலுமிச்சைச் சாறு
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தில் உள்ள துளைகளைச் சரி செய்யவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது. ஒரு தக்காளியை எடுத்து அரைத்து பேஸ்ட்டாக மாற்றி அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறினை சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். இதனை வாரத்தில் ஒரு முறை செய்தால் போதுமானது.

வினிகர்
வினிகர் சருமத்தில் உள்ள பி.எச் அளவை சமநிலைப்படுத்துவதோடு, அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரண்டு தேக்கரண்டியளவு தக்காளி சாறு மற்றும் இரண்டு தேக்கரண்டியளவு வினிகர் சேர்த்துக் கலக்கி பஞ்சு எடுத்து அதில் நனைத்து முகத்தில் அப்ளை செய்து காய்ந்த பிறகு கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் 2 முதல் 3 முறை செய்யலாம்.

ஓட்ஸ்
சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை அகற்ற ஓட்ஸ் உதவும். 2 தக்காளியின் சாற்றை எடுத்து அதனுடன் 2 தேக்கரண்டியளவு ஓட்ஸ் சேர்த்துக் கலந்து முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து கழுவுங்கள்.



Click it and Unblock the Notifications