Latest Updates
-
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்..
பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா? அப்ப கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க...
கடலை மாவு அனைத்து சருமத்தினரும் பயன்படுத்த ஏற்றது. அதுவும் இந்த கடலை மாவை ஒருசில பொருட்களுடன் சேர்த்து கலந்து ஃபேஸ் பேக் போட்டால் பல சரும பிரச்சனைகளை போக்கி, சருமத்தின் அழகை மேம்படுத்தலாம்.
கடலை மாவு சமையலில் மட்டுமின்றி, அழகு பராமரிப்பிலும் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பழங்காலத்தில் நம் முன்னோர்களின் அழகின் ரகசியத்திற்கு காரணமாக இருந்தது கடலை மாவு தான். சொல்லப்போனால் அக்காலத்தில் நம் முன்னோர்கள் சோப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மாவை தான் பயன்படுத்தினார்கள். கடலை மாவு நமது சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதில் சரும கருமையைப் போக்குவது, எண்ணெய் பசையை குறைப்பது, சருமத்தில் வளரும் முடிகளை நீக்குவது, முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குவது, தழும்புகளை மறைப்பது, முதுமையை எதிர்ப்பது போன்றவை அடங்கும்.

கடலை மாவில் ஏராளமான ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்து, சருமத்திற்கு பொலிவைத் தருகிறது. இத்தகைய கடலை மாவு அனைத்து சருமத்தினரும் பயன்படுத்த ஏற்றது. அதுவும் இந்த கடலை மாவை ஒருசில பொருட்களுடன் சேர்த்து கலந்து ஃபேஸ் பேக் போட்டால் பல சரும பிரச்சனைகளை போக்கி, சருமத்தின் அழகை மேம்படுத்தலாம். இப்போது ஒருசில கடலை மாவு ஃபேஸ் பேக்குகளைக் குறித்து காண்போம்.

பொலிவான சருமத்தைப் பெற...
உங்கள் முகம் பொலிவிழந்து உள்ளதா? அப்படியானால் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பால், 2 துளிகள் கிளிசரின் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.

கருமையான தழும்புகளைப் போக்க...
உங்கள் முகத்தில் அசிங்கமாக கருமையான தழும்புகள் அதிகமாக உள்ளதா? அப்படியானால் அதைப் போக்க ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் பேஸ்ட் செய்ய தேவையான அளவு தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பிம்பிளைப் போக்க...
உங்களுக்கு பிம்பிள் அதிகமாக வருமா? மற்றும் அந்த பிம்பிள் உங்கள் முகத்தில் அசிங்கமான வடுக்களை விட்டு செல்கிறதா? அப்படியானால் அவற்றைத் தடுக்க, ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வலிமிக்க பருக்களுக்கு...
உங்களுக்கு அடிக்கடி சீழ் நிறைந்த மற்றும் வலிமிக்க பருக்கள் வருமா? அவற்றைத் தடுக்க வேண்டுமானால், ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கருவளையத்தைப் போக்க...
உங்களுக்கு கருவளையம் உள்ளதா? அந்த கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா? அப்படியானால் அவற்றைப் போக்க, ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, டீ டிகாசனை சிறிது ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

எண்ணெய் பசையைப் போக்க...
உங்கள் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக உள்ளதா? எப்போதும் முகத்தில் எண்ணெய் வழிந்தவாறு உள்ளதா? அப்படியானால் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவில் 2-3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, ரோஸ் வாட்டரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்துங்கள்.

கருமையை நீக்க...
உங்கள் முகம் கருப்பாக உள்ளதா? உங்கள் முகத்தில் உள்ள கருமையைப் போக்க, ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

சரும சுருக்கத்தைப் போக்க..
உங்கள் முகத்தில் முதுமைக் கோடுகள், சுருக்கங்கள் தெரிய ஆரம்பிக்கிறதா? அவற்றைப் போக்க வேண்டுமா? அப்படியானால் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த சருமம் இளமையாக காட்சியளிக்கும்.



Click it and Unblock the Notifications











