Latest Updates
-
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...
உங்கள் சருமத்தில் இப்படியான அடையாளம் இருக்கா? ஈஸியா போக்கலாம்!
சருமத்தில் ஏற்படுகிற பிக்மெண்ட்களை போக்க உதவிடும் ஃபேஸ் பேக்குகள்
பருப்பு வகைகளில் அதிகப்படியான ப்ரோட்டீன் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கிற அதே முக்கியத்துவம் சருமத்திற்கும் கொடுக்க வேண்டியது அவசியம்.
உள்ளுருப்புகளில் ஏற்படுகிற மாற்றங்கள், அறிகுறிகள் சருமத்தில் தான் முதலில் தெரியும். மசூர் பருப்பு சருமத்திற்கு பெரிதும் உதவிடும். சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்குவது, தளர்வை நீக்குவது என சருமத்திற்கு முக்கிய பணியை செய்கிறது. இதைத் தவிர சருமத்தில் அதிக எண்ணெய் சுரப்பு இல்லாமல் பாதுகாக்கிறது.
மசூர் பருப்பு கொண்டு வீட்டிலேயே செய்யக்கூடிய சில ஃபேஸ் பேக்குகள் பற்றிய டிப்ஸ்

தயிருடன் :
ட்ரை ஸ்கின் கொண்டவர்களுக்கு இது பெரிதும் உதவிடும். மசூர் பருப்பினை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள் அதனுடன் தயிர் கலந்து ஃபேஸ் பேக்காக போட வேண்டும். பின்னர் பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்து வருவதால் உங்கள் சருமம் சாஃப்ட்டாக மாறும்.

தேங்காய் :
பிக்மெண்ட் இருப்பவர்கள் இதைச் செய்திடலாம். தேங்காய் சருமத்திற்கு பொலிவை வழங்குவதுடன் சருமத்தை ஹைட்ரேட்டடாக வைத்திருக்கும்.
சருமத்தில் இருக்கிற பிக்மண்ட்களை குறைக்க பெரிதும் உதவிடுகிறது. சிகப்பு புள்ளிகள், கருப்பு புள்ளிகள் ஆகியவற்றை போக்க உதவிடும். முதல் நாள் இரவே மசூர் பருப்பினை தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். மறுநாள் காலை பருப்பினை அரைத்து அதில் தேங்காய்ப்பால் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் முப்பது நிமிடங்கள் கழித்து கழுவிடலாம்.

மஞ்சள் :
மஞ்சளில் இருக்கிற ஆண்ட்டி செப்டிக் துகள்களினால் பரு மற்றும் ஆக்னீ போன்றவை நீக்க உதவிடும். முகத்தில் சிலருக்கு உதட்டின் ஓரங்களில், மூக்கின் மேலே கருப்பாக படிந்திருக்கும் அதனைப் போக்கவும் இது உதவிடுகிறது.
மசூர் பருப்புடன் மஞ்சள் சேர்த்து அரைத்து ஃபேஸ் பேக் போடுங்கள். இதில் வேண்டுமானால் தயிர் சேர்த்துக் கொள்லலாம். சுமார் பத்து நிமிடங்கள் வரை காத்திருந்து கழுவிடலாம்.

பாதாம் :
மசூர் பருப்புடன் பாதாம் சேர்ப்பதினால் நம் சருமத்தில் உள்ள துளைகள் எல்லாம் சற்று தளர்வுறும் இதனால் சருமத்தில் சேர்ந்திருக்கும் அழுக்குகள் எல்லாம் வெளியேறும். இதனை தொடர்ந்து செய்து வர சருமம் ஃபிரஷ்ஷாக இருக்கும்.
முதல் நாள் இரவு மசூர் பருப்பு மற்றும் பாதாம் தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை அவற்றை அரைத்து அதனுடன் இரண்டு சொட்டி ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்திட வேண்டும்.

வெந்தயம் :
இந்த பேக் பவுடரை தயாரித்து நீங்கள் ஒரு மாதம் வரை பத்திரப்படுத்தி பயன்படுத்தலாம். இரண்டையும் தனித்தனியாக ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவு மட்டும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அவற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஃபேஸ் ஃபேக்காக போட வேண்டும்.
சுமார் அரை மணி நேரம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும்.

பயித்த மாவு :
பரு அதிகமாக தோன்றினாலோ அல்லது பரு இருக்கும் இடம் எரிச்சலை ஏற்படுத்தினாலோ இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம். பரு ஏற்பட்ட மார்க்கையும் குறைத்திடும். இதனை பயன்படுத்துவதால் அதிக எண்ணெய் சுரப்பு கட்டுப்படுத்தப்படும் என்பதால் மேற்கொண்டு பருக்கள் வராமல் கட்டுப்படுத்தப்படும்.
இரண்டு ஸ்பூன் மசூர் பருப்பு தூள், ஒரு ஸ்பூன் பயித்த மாவு மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் கலந்து ஃபேஸ் பேக்காக போடலாம்.

பால் :
மசூர் பருப்பு இறந்த செல்களை நீக்குவதால் புதிய செல்களை உருவாக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலை ஃபேஸ் பேக்குடன் சேர்வதால் உடனே அலர்ஜி ஏற்படாமல் தவிர்க்கலாம்.
இந்த ஃபேஸ் பேக்கின் போது மசூர் பருப்பினை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள் அவற்றுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து ஸ்க்ரப் செய்ய வேண்டும். பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவிடலாம்.

எலுமிச்சை தோல் :
இதனையும் நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தலாம். எல்லா வகையான சருமத்தினரும் இதனை பயன்படுத்தலாம். அடிக்கடி மேக்கப் போடுகிறவர்கள் சருமத்தில் இருக்கிற டாக்சின்களை அகற்ற இதனைப் பயன்படுத்தலாம்.
மசூர் பருப்பு தூளுடன், எலுமிச்சை தோலை காய வைத்து அரைத்து எடுத்த பவுடரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள், இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து பேஸ்ட்டாகி ஃபேஸ் பேக்காக போடுங்கள்.

கவனம் :
மசூர் பருப்பு சருமத்தில் உள்ள தண்ணீரை அதிகமாக உறியும் தன்மை கொண்டது என்பதால் தினமும் பயன்படுத்த வேண்டாம். வாரம் ஒரு முறை பயன்படுத்தாலம். அலர்ஜி, ரேசஸ் இருந்தால் மசூர் பருப்பு பயன்படுத்த வேண்டாம்.
இது ப்ளாக்ஹெட்ஸ் மற்றும் வொயிட் ஹெட்ஸ் போக்க உதவிடும். அந்த இடத்திற்கு மட்டும் தானே என தினமும் பயன்படுத்த வேண்டாம். அதன் தீவிரம் இன்னும் அதிகரித்துவிடும்.



Click it and Unblock the Notifications











