Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
முகப்பரு தழும்பை மறைய வைக்கனுமா? இதெல்லாம் உபயோகிச்சுப் பாருங்க!!
முகப்பரு தழும்பை எளிதில் மறைய வைக்க உபயோகமான குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்திப் பாருங்கள்.
முகப்பருக்கள் மறைந்தாலும் அதன் தழும்புகள் சட்சியாக விடாமல் உங்கள் சருமத்தில் இருந்துவிடும். சிலருக்கு பல வருடங்கள் ஆனாலும் பருத் தழும்புகள் குழியாய் அசிங்கமா காட்சியளிக்கும்.
அந்த தழும்புகளை எளிதில் போக்க முடியாதுதான். ஆனால் சோம்பேறித்தனம் படாமல் தினமும் தவறாமல் செய்தால் வெகுவிரைவிலேயே தழும்புகள் மறைந்து உங்கள் முகம் புத்தம்புதிதாக காட்சியளிக்கும்.
அதற்கான வழிகள் இங்கே தந்திருக்கிறோம். உபயோகப்படுத்திப் பாருங்கள். பயனளித்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

வாழைப்பழத் தோல் மற்றும் யோகார்ட் :
வாழைப்பழத்தோலை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது யோகார்ட் கலந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். இவாறு செய்தால் தழும்புகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

ஜாதிக்காய் :
முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப்போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப் பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்மேல் போட்டு வரவும் . தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்புள்ளி மறைந்து விடும்.

சந்தனம் மற்றும் பாதாம் ;
கோபி சந்தனம் - ஒரு டீ ஸ்பூன்அளவுபாதாம் பருப்பு - மூன்று (நீரில்ஊறவைத்தது) தயிர் - 2 - டீ ஸ்பூன்எலுமிச்சை சாறு - 2 - டீ ஸ்பூன் இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதி களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு பெறும்.

க்ரீன் டீ மற்றும் மஞ்சள் பொடி :
1 ஸ்பூன் க்ரீன் டீயை சிறிது கால் நீரில் போட்டு அதனுடன் சிறிது சர்க்கரை மற்றும் கஸ்தூரி மஞ்சளைப் போட்டு கலக்கிக் கொள்லுங்கல். இந்த கலவையை முகத்தில் மாஸ்க் போல் போட்டு நன்றாக காய விடுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இவாறு தினமும் செய்து வந்தால் முகப்பரு தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.

எலுமிச்சை மற்றும் முட்டை :
எலுமிச்சை சாறெடுத்து அதனை முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து அவற்றுடன் 1 ஸ்பூன் க்டலை மாவு கலந்து பேக்காக முகத்தில் போடுங்கள். வாரம் ஒருமுறை இப்படி செய்தால் எண்ணெய் பசை கட்டுப்படும். முகப்பரு தழும்பும் காணாமல் போகும். வறண்ட சருமம் இருப்பவர்கள் இதை செய்ய பண்ண வேண்டாம்.



Click it and Unblock the Notifications