Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
பார்லர் அழகு வீட்டிலிருந்தபடியே பெறலாம்!!உங்களுக்காக சின்ன சின்ன அழகுக் குறிப்புகள்!!
சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத இயற்கையான பொருட்களைக் கொண்டே சருமத்தை அழகாக பராமரிக்கலாம்.
தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. முகத்தையும் சருமத்தையும் பராமாரிக்க கடைகளில் கிடைக்கும் க்ரீம்களை பயன்படுத்துவதை விட வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கப்படும் பொருட்களைக் கொண்டு பராமரிக்கலாம். செயற்கையை விட இயற்கைக்கு என்றுமே மதிப்புண்டு. இயற்கையான முறையில் நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கும் பொருள் என்பதால் அவற்றில் கலப்படம் இருக்குமோ அதனால் சருமத்திற்கு பாதிப்பு உண்டாகுமோ என்று கவலைப்பட வேண்டாம்.

உங்கள் அழகை பராமரிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய டிப்ஸ்

உதடுகளுக்கு :
இரவில் படுக்க போகும் போது வெண்ணையை உதட்டில் தடவிக் கொள்ள வேண்டும்.அதனை துடைக்கத் தேவையில்லை மறுநாள் காலையில் வழக்கம் போல உங்கள் வேலையை தொடரலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு பொலிவுடன் இருக்கும்.

வெப்பம் :
அதிக உடற்சூட்டினாலோ அல்லது வெயில் அதிகம் அலைபவர்களுக்கு முகத்தில் புள்ளிகள் தோன்றும், இதற்கு முள்ளங்கி சாறுடன் இரண்டு ஸ்பூன் மோர் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கருமை :
வெயிலினாலோ அல்லது முகத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றாலோ முகத்தில் கருமை தோன்றும். இதனை போக்க, வேப்பங்கொழுந்து சிறிதளவு ஆரஞ்சு பழத்தோல் சிறிதளவு மற்றும் கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம பங்காக கலந்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை கருமை படந்துள்ள இடங்களில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

கண்கள் :
கண்களில் வருகின்ற முக்கிய பிரச்சனையாக இப்போது கருவளையம் மாறிவிட்டது. இதனை போக்க, கண்களைச் சுற்றி பாதாம் ஆயில் தடவி லேசாக மசாஜ் செய்திடலாம். அல்லது கொத்தமல்லிச் சாறு எடுத்து கண்களைச் சுற்றி தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

சருமம் :
கைகால்களில் பொரிப்பொரியாக இருக்கும். அதனை போக்க பார்லி பவுடர் 4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் 1டீஸ்ப்பன் கலந்து தடவி வாருங்கள். இதனால் சருமத்தில் பொரிப்பொரியாக இருப்பது குறைவதுடன் சருமத்திற்கு பொலிவாகவும் இருக்கும்.

கழுத்து :
அதிகமாக வியர்வை சுரக்கும் இடமான கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.



Click it and Unblock the Notifications