Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
கருவளையங்களை முழுமையாக போக்க சில டிப்ஸ்...
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கருவளையங்களால் அவஸ்தைப்படுவோம். இதற்கு காரணம் நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், நைட்-ஷிப்ட் வேலையும் தான் காரணம். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போய், கண்கள் சோர்வடைந்து, கண்களைச் சுற்றி கருவளையங்களை வரவழைக்கிறது.
மேலும் மரபணுக்கள், போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, புகைப்பிடிப்பது போன்றவற்றினாலும் கருவளையங்கள் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கருவளையங்கள் ஒருவரது முகத்தை சோர்வாக வெளிக்காட்டுவதோடு, அசிங்கமாக வெளிக்காட்டும்.
எனவே கருவளையங்கள் வராமல் இருக்கவும், ஏற்கனவே இருக்கும் கருவளையங்கள் முழுமையாக மறையவும் ஒருசில டிப்ஸ்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.

தண்ணீர் குடிக்கவும்
உடலில் நச்சுக்கள் அதிகம் இருந்தாலும், தூக்கத்தை இழக்க வேண்டியிருக்கும். தினமும் தவறாமல் குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். இப்படி செய்வதால் உடலில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.

ஸ்பூன்
இரவில் படுக்கும் முன், சில்வர் ஸ்பூனை ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் காலையில் எழுந்த பின் அதனை கண்களின் மேல் வைத்து எடுக்க வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மற்றும் கண்களில் உள்ள வீக்கம் போன்றவை நீங்கும்.

குளிர்ந்த டீ பேக்
டீ பேக் கொண்டு டீ போட்ட பின், அதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் அதனை கண்களின் மேல் வைக்க வேண்டும். இதனால் அதில் உள்ள உட்பொருட்கள் கருவளையங்களை மறையச் செய்யும்.

வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு
வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கண்களில் உள்ள சோர்வு நீக்கப்பட்டு, இரத்த ஓட்டம் மேம்படுத்தப்பட்டு, கருவளையங்கள் மறையும்.

தக்காளி ஜூஸ்
தக்காளி சாற்றில் சிறிது எலுமிச்சை சாறு, கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ, கருவளையம் விரைவில் நீங்கும்.

தூக்கம்
முக்கியமாக தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். ஒருவர் தினமும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற்றாலே, கருவளையம் வருவதைத் தடுக்கலாம்.

காபி
காபி அதிகம் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இதற்கு காபியில் உள்ள காஃப்பைன் தான் காரணம். இது உடலை வறட்சியடையச் செய்யும்.



Click it and Unblock the Notifications