Latest Updates
-
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
பளபளக்கும் சருமத்திற்கான வழியை இங்கே கண்டுபிடிங்க!!
உலக அழகியா கூட வேண்டாம் .. உள்ளூர் அழகியா மாறனும்னு எல்லாருக்குமே ஆசை இல்லாம இருக்காது. ஆனா அதுக்கான எந்த முயற்சியுமே எடுக்காமல் அது எப்படி சாத்தியமாகும். முடிஞ்ச வரை உங்கள் சருமம் எதை பாதகம் இல்லாம ஏத்துக்குதோ அதையெல்லாம் பயன்படுத்தலாம். சருமம் இளமையாகவும், ஜொலிஜொலிப்போடும், களை கட்டும்.
செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்காத எளிய டிப்ஸ் தான் இங்கே குறிப்பிட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

வெள்ளரிக்காய் +மஞ்சள் :
வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். அரை ஸ்பூன் வெள்ளரிக்காய், அரை ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் பேக்காக போடவும்.15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
இந்த கலவை சருமத்தை மெருகேற்றும். மென்மையான சருமம் கிடைக்கும். வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கிவிடும்.
அவகாடோ + தேன் :
அவகாடோவின் சதைப் பகுதியை எடுத்து மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தேயுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இவை சருமத்தில் உள்ள நுண்ணிய சுருக்கங்களை போக்க அருமையான குறிப்பு.
கடலை மாவு +உருளைக் கிழங்கு சாறு :
உருளைக் கிழங்கில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின் கடலை மாவு 4 ஸ்பூன் எடுத்து, அதில் சிறிது உருளைக் கிழங்கு சாறு சேர்த்து கலக்குங்கள்.பேஸ்ட் போல ஆனவுடன் அதனை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். மாசு மரு இன்றி முகம் நிறம் பெற்று மின்னும்.
பால் பவுடர்+ தேங்காய் நீர்
இரண்டையும் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இவற்றை முகத்தில் போட்டு நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம். தேங்காய் நீரில் புரோட்டின் உள்ளது. இது ஈரப்பதத்தை அதிகப்படுத்தும். கொலாஜன் உற்பத்தியை தூண்டும். பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் அமிலம் சுருக்கங்களைப் போகும். கிருமிகளின் தொற்றுக்களை அழித்துவிடும்.
சந்தனம் + ரோஸ் வாட்டர் :
சந்தனத்தை கடையில் வாங்குவதை விட அரைத்து எடுத்துக் கொள்வது நல்லது. அரைத்த சந்தனத்தில் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவுங்கள்.
இவை சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமையை போக்கிவிடும். ஈரப்பதத்தை அளித்து சுருக்கங்களை நீக்கிவிடும். இந்த குறிப்பு சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.



Click it and Unblock the Notifications




