Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கருப்பா இருக்கும் கழுத்தை வெள்ளையாக்குவது எப்படி?
வெயில் காலத்தில் பெண்கள் பலரும் தங்களது முடிகளை தூக்கி கொண்டைப் போட்டுக் கொள்வார்கள். ஆண்களோ அதிகம் வியர்க்கும் என்பதால் மிலிட்டரி கட் செய்து கொள்வார்கள். இப்படி இருக்கும் போது கழுத்துப் பகுதி கருமையாக இருந்தால் எப்படி இருக்கும்.
இப்படி கருமையாக உள்ள கழுத்தை போதிய பராமரிப்புக்களின் மூலம் வெள்ளையாக்கலாம். குறிப்பாக ப்ளீச்சிங் தன்மை கொண்ட எலுமிச்சையைக் கொண்டு கழுத்தைப் பராமரித்து வந்தால், மிகவும் வேகமாக கருமை அகலும்.
இங்கு எலுமிச்சையைக் கொண்டு எப்படி கழுத்தில் உள்ள கருமையைப் போக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி பயன் பெறுங்கள்.

எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர்
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, பஞ்சு பயன்படுத்தி இரவில் படுக்கும் முன் கழுத்தில் தடவி இரவு முழுவமும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை மறையும்.

எலுமிச்சை மற்றும் தேன்
இந்த முறை கழுத்து கருமையை மட்டுமின்றி, பல்வேறு சரும பிரச்சனைகளையும் தடுக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் மஞ்சள் தூள்
எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இந்த முறையை மேற்கொண்டு வந்தால், கழுத்தில் உள்ள கருமை வேகமாக நீங்கும்.

எலுமிச்சை மற்றும் தக்காளி
தக்காளி சாற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருமையான இடத்தில் தடவி 30-35 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கழுத்தில் இருக்கும் கருப்பு படலம் விரைவில் மறையும்.

எலுமிச்சை, ஆலிவ் ஆயில் மற்றும் தேன்
1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி மசாஜ் செய்து 25-30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலமும் கழுத்துப் பகுதியில் இருக்கும் கருமை நீங்கும்.



Click it and Unblock the Notifications











