Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
சிவந்த சருமம் பெற பாதாம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணியிருக்கீங்களா?
சிவந்த சருமம் என்பது ஒரு பிரச்சனைக்குரிய விஷயமாய் இருந்தாலும், மனதளவில் எல்லோருமே சில சமயங்களில் விரும்புகிறோம். மாநிறமாக பிறந்தாலும் அழகுதான். கருப்பாக பிறந்தாலும் அழகுதான்.
ஆனால் சருமம் தொடர்ந்து சூரிய ஒளியிலும் மாசு நிறைந்த சுற்றுபுறத்தினாலும் மோசமடையும்போதுதான் நமக்கு கவலைகளை தரும்.
அதுமட்டுமில்லாமல், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு,ஆகியவைகளும் சருமத்தை முதலில் பாதிக்கின்றன்.பெரும்பாலான பெண்களுக்கு 28 வயது வரை முகப்பரு பிரச்சனையயும் சேர்ந்து முகத்தை கெடுக்கும்.

இந்த சமயங்களில் டிவியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட கெமிக்கல் கலந்த ஃபேர்னஸ் க்ரீம்களையும் வாங்கி உபயோகப்படுத்துகிறோம். இது சருமத்தில் அப்போதைக்கு நிறமாய் காட்டினாலும் போகப் போக மேலும் பாதிப்பைதான் தருமே தவிர நிரந்த தீர்வை தராது.
ஆகவே உங்களின் பிரச்சனையை தீர்க்க, இயற்கையானவைகளையே நாடுங்கள். உங்கள் சருமத்திற்கு சற்றும் கேடு விளைவிக்காத இந்த ஃபேஸ் பேக்கை முயன்று பாருங்களேன்.
பாதாம் ஃபேஸ்பேக் :
இந்த ஃபேஸ்பேக்கின் நன்மை என்னவென்றால், முகத்திலுள்ள கருமையை போக்கும்.சருமத்திற்கு சற்று நிறத்தினை கூட்டி மிளிரச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
சுருக்கங்கள் போக்கி, வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு உகந்தது இந்த அழகு குறிப்பு. எப்படி செய்வோம் என பார்க்கலாம்.
தேவையானவை :
பாதாம் =3-4
பால்- 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு-1 டேபிள் ஸ்பூன்
பாதாமில் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும். பாதிக்கப்பட்ட திசுக்களை சீர் செய்து, போஷாக்கு அளிக்கும்.
பால் சிறந்த மாய்ஸ்ரைஸர் ஆகும். வறண்ட சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கிறது. எலுமிச்சை சாறு இயற்கை ப்ளீச் தருகிறது. வெயிலினால் பாதிப்படைந்த சருமத்தில் உண்டான கருமையை அகற்றி நிறத்தினைக் கூட்டுகிறது.
செய்முறை :
பாதாமை இரவினில் ஊற வையுங்கள். மறு நாள் அதனை அரைத்து அதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்றாக கலக்கி பேஸ்ட் போலாக்குங்கள். இப்போது இந்த கலவையினை முகத்திலும் கழுத்திலும் தேய்த்து இதமாக மசாஜ் செய்யுங்கள்.
ஒரு 20 நிமிடங்கள் காய விடவும். பின் குளிர்ந்த நீரினால் கழுவலாம்.
வாரம் ஒரு முறை செய்தால்,முகம் மாசு மருவின்றி ஜொலிக்கும். நிறம் கூடும்.மிருதுவாய் மாறும். மாற்றத்தை உணர செய்து பாருங்கள்.



Click it and Unblock the Notifications













