Latest Updates
-
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்..
இயற்கையான முறையில் கரும்புள்ளிகளை நீக்க சில அட்டகாசமான வழிகள்!!!
கரும்புள்ளிகள் சருமத்தின் அழகை கெடுப்பதில் முதன்மையானவை. இத்தகைய கரும்புள்ளிகளானது முகப்பரு மற்றும் பிம்பிளால் ஏற்படக்கூடியவை. மேலும் இந்த கரும்புள்ளிகளைச் சுற்றி வெள்ளையான ஒரு வளையம் போன்றவை இருப்பதுடன், அவை சருமத்தின் அழகையே அசிங்கமாக வெளிப்படுத்தும். இவற்றைப் பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் கரும்புள்ளிகள் சருமத்தில் இருந்தால், அவை சருமத்தை பொலிவற்றதாகவும், சோர்வுடனும் வெளிப்படுத்தும். மேலும் இத்தகைய கரும்புள்ளிகளை ஏற்படுத்தும் முகப்பரு மற்றும் பிம்பிள் ஏற்படுவதற்கு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஆகவே கரும்புள்ளிகள் வராமல் இருக்க வேண்டுமானால், வாழ்க்கை முறை மற்றும் உண்ணும் உணவுகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
இங்கு சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை முயற்சி செய்தால், கரும்புள்ளிகளை முற்றிலும் நீக்கலாம். அதுமட்டுமின்றி, இந்த பொருட்கள் சருமத்தின் பொலிவையும், மென்மையையும் மேம்படுத்தும்.

தேன்
சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்வதில் தேன் முக்கிய பங்கினை வகிக்கிறது. தேனை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, பாதிப்படைந்த சரும செல்களைப் புதுப்பிக்கிறது. அதிலும் சருமத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்துவது இறந்த சரும செல்கள். ஆகவே தேனை தொடர்ச்சியாக சருமத்தில் பயன்படுத்தி வரை, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கிவிடுகிறது.

எலுமிச்சை
எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் இருப்பதால், இதனை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதுடன், சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும். ஒருவேளை எலுமிச்சை சாற்றினை சருமத்தில் தடவும் போது, எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்பட்டால், எலுமிச்சை சாற்றுடன் தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். மேலும் எலுமிச்சை சாற்றினை ஃபேஸ் பேக்கிலும் பயன்படுத்தலாம். குறிப்பாக எலுமிச்சை சாற்றினை சருமத்திற்கு பயன்படுத்திய பின்னர், வெயிலில் சுற்றக்கூடாது. இதனால் சருமம் மேலும் கருமையாகத் தான் மாறும்.

பால் மற்றும் பால் பொருட்கள்
பால் மற்றும் பால் பொருட்களில் லாக்டிக் ஆசிட் உள்ளது. இவை சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைப்பதில் சிறந்தது. மேலும் பால் பொருட்களில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அதனை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, அது சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் சருமத்திற்கு பால், மில்க் க்ரீம் அல்லது தயிரை சருமத்திற்கு நேரடியாக தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வர, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

வைட்டமின் ஈ
சருமத்திற்கு வைட்டமின் ஈ மிகவும் நல்லது. ஏனெனில் இது உடலில் உள்ள தேவையற்ற டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். எனவே இரவில் படுக்கும் போது வைட்டமின் ஈ நிறைந்த பொருளை சருமத்தில் தடவி வந்தால், அது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கிவிடும். வேண்டுமானால் இதற்கு வைட்டமின் ஈ மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.

மஞ்சள்
தினமும் தவறாமல் மஞ்சளை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதுடன், சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, முகப்பரு மற்றும் பிம்பிள் வராமல் தடுக்கும். எனவே சருமத்தில் எந்த பிரச்சனை வந்தாலும், மஞ்சளை சருமத்திற்கு பயன்படுத்தி வாருங்கள்.



Click it and Unblock the Notifications