Latest Updates
-
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா?
திருமணத்தன்று கருவளையம் இல்லாமலிருக்க சில டிப்ஸ்...
திருமணம் என்று சொன்னதுமே முகத்தில் ஒருவித கல்யாணக் களை வந்துவிடும். அந்த நேரம் அனைவருமே நன்கு அழகாக இருக்க வேண்டுமென்று சருமத்தில் அதிக கவனம் சொலுத்தி, அதனை சரியாக பராமரிப்போம். அதற்காக நிறைய ஃபேஸ் பேக் போடுவது, அதிகமான அளவு பழங்களை சாப்பிடுவது, உடலை குறைக்கவும், சருமம் பொலிவாகவும் க்ரீன் டீ குடிப்பது என்றெல்லாம் செய்வோம். இருப்பினும் திருமணத்தன்று மட்டும் சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் இருக்கும்.
மேலும் இந்த கருவளையத்தை என்ன செய்தாலும் போகாமல் இருக்கும். எனவே திருமணத்தன்று இந்த மாதிரியான கருவளையம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொண்டு, அவற்றை பின்பற்றுவதோடு, அளவுக்கு அதிகமான தண்ணீரைக் குடித்தாலும், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, கண்களும் நன்கு பொலிவோடு காணப்படும்.

தூக்கம்
நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தாலே, தம்பதிகளுக்கு இருக்கும் குஷியில், இரவு முழுவதும் சாட்டிங் செய்வதால், தூக்கமே வராது தான். இருப்பினும் அவ்வாறு சரியாக தூங்காமல் இருந்தால், அது உடலையும், உடல் அழகையும் பாதிக்கும். அதற்காக இரவில் தூங்காமல் இருந்து, பகலில் தூங்கிக் கொண்டால் எதுவும் ஏற்படாது என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் இரவில் சரியான நேரத்தில் தூங்கினால் தான், கண்களில் கருவளையம் ஏற்படாமல் இருக்கும்.

வெள்ளரிக்காய்
நிறைய பெண்கள் கருவளையம் வராமலிருக்க கண்களுக்கு வெள்ளரிக்காயை வைப்பார்கள். ஏனெனில் வெள்ளரிக்காயை வைத்தால், கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், பளிச்சென்று ப்ளீச்சிங் செய்தது போன்றும் இருக்கும். ஆகவே திருமண நாளன்று ஒரு 20 நிமிடம் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களுக்கு வைத்தால், கருவளையம் போய்விடும். வேண்டுமெனில் வெள்ளரிக்காய்க்கு பதிலாக உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம்.

டீ பேக்
திருமணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்னர், கண்களில் உள்ள கருவளையத்தை போக்க வேண்டுமா? அப்படியெனில் டீ பேக்கை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, பின் அதனை பிளிந்து, அந்த டீ பேக்கை கண்களின் மீது 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை செய்து வந்தால், கண்களில் உள்ள கருவளையம் எளிதில் நீங்கிவிடும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சையின் சாற்றை வைத்து, கண்களைச் சுற்றி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது தக்காளி சாற்றையும் கலந்து செய்யலாம். அதிலும் இதனை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், கருவளையம் போய்விடும். கண்களும் நன்கு சற்று கொலுகொலுவென காணப்படும்.

ஊட்டச்சத்துள்ள உணவுகள்
உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும், கருவளையம் வரும். ஆகவே அதற்கு பசலைக் கீரை, முட்டைகோஸ், கேரட், தக்காளி போன்றவற்றை சற்று அதிகம் சாப்பிட வேண்டும்.
வேறு என்னவெல்லாம் செய்தால் கருவளையம் நீங்கும் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...



Click it and Unblock the Notifications











