Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
வறண்ட சருமத்திற்கு பொலிவு தரும் வீட்டு தயாரிப்புகள்

நன்கு கனிந்த பூசணி, இத்துடன் கால் கப் தயிர், இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இதனை முகம், கை, கால், கழுத்து என நன்றாக தடவி காயவைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி துடைத்து விடவும். வறண்ட சருமத்தினர் அப்படியே பூசலாம். அதே சமயம் எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் இந்த கலவையை லேசாக சூடு படுத்தி பின்னர் சருமத்தில் பூசலாம் சருமம் பொலிவு பெறும்.
நன்கு கனிந்த வாழைப்பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இதனை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பொலிவாகும்.
மூன்று காரட்டினை நன்கு வேகவைத்து மசித்துக்கொள்ளவும் . இத்துடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து பிசையவும். இந்தக் கலவையை சருமத்தின் பூசி உலரவைக்கவும். 15 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இது சாதாரண, வறண்ட, எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது.
இரண்டு டேபிள்ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், இரண்டு டேபிள்ஸ்பூன் தயில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை ஒரு பஞ்சில் தொட்டு சருமத்தில் அனைத்து பகுதிகளிலும் பூசவும். பதினைந்து நிமிடங்கள் காயவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் அலசவும். சருமம் பொலிவாகிவிடும். தயிர் இல்லாதவர்கள் பால் சேர்க்கலாம்.
ஆரஞ்ச் பவுடர், ஆலிவ் எண்ணெய், பாதம் எண்ணெய், பசும்பால், ஆகியவை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இதனை லேசான காட்டன் பஞ்சு மூலம் தொட்டு பூசவும். நன்கு உலரவைத்து 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும் சருமம் மினுமினுப்பாக மாறிவிடும்.



Click it and Unblock the Notifications











