Latest Updates
-
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம்
பனிகாலத்துல சருமம் பொலிவிழந்து இருக்கா? ஆரஞ்சு ஃபேஸ் பேக் போடுங்க...

ஆரஞ்சு பேக்: இந்த ஃபேஸ் பேக் போடுவது மிகவும் எளிது. இதற்கு எந்த ஒரு பொருளையும் சேர்த்து அரைத்து போட வேண்டுமென்ற அவசியம் இல்லை. இந்த ஃபேஸ் பேக்கில் ஆரஞ்சு பழத்தில் சாறு மற்றும் உள்ளே உள்ள பல்ப்பை வைத்து மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், சருமம் நன்கு இறுக்கமடைந்து, அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தை பொலிவாக்கி, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்து வந்தால் நல்லது.
ஆரஞ்சு ஜூஸ் மற்றும் மில்க் கிளின்சர்: சருமத்தை சுத்தம் கிளின்சர் மிகவும் முக்கியமானது. அதிலும் வீட்டிலேயே கிளின்சர் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றை நீக்கும். அதற்கு ஆரஞ்சு ஜூஸ் உடன், மில்க் கிளின்சரை கலந்து முகத்தில் தடவி ஒரு நிமிடத்திற்கு மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு ஈரப்பசையுடன், பளிச்சென்று காணப்படும்.
ஆரஞ்சு தோல் மற்றும் தயிர்: இந்த வகையான ஃபேஸ் ஸ்கரப் மிகவும் பிரபலமானது. இதனை ஆண்களும் செய்யலாம். அந்த ஸ்கரப்பிற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து, பின் அதனை பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் தயிருடன், 1/2 டீஸ்பூன் ஆரஞ்சு பவுடரை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, பின் காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை இருப்பவர்கள், இந்த கலவையுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, செய்தால் நல்லது.
ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை மற்றும் தயிர்: எலுமிச்சை மற்றும் தயிர் தான் வீட்டில் தயாரிக்கும் ஃபேஸ் பேக்கிற்கு மூலதனப் பொருள். ஆகவே அத்துடன் சிறிது ஆரஞ்சு ஜூஸை சேர்த்து, முகத்திற்கு போட்டால், சருமம் நன்கு பொலிவுடன் அழகாகக் காணப்படும். மேலும் சருமத்தில் இருக்கும் பழுப்பு நிறமும் மறைந்துவிடும்.
ஆரஞ்சு தோல் மற்றும் ஓட்ஸ்: இது ஒரு ஈஸியான ஒரு ஸ்கரப். இந்த ஸ்கரப்பை செய்தால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் எளிதில் நீங்கிவிடும். அதற்கு ஆரஞ்சு தோலை காய வைத்து பொடி செய்து, ஓட்ஸ் உடன் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை ஸ்கரப் செய்தால், சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும்.
ஆகவே இந்த குளிர்காலத்தில் மேற்கூறிய ஃபேஸ் பேக்குகளை போட்டு, முகத்தை அழகாகவும் பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications