Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
அழகை மேம்படுத்தும் பாதாம் எண்ணெய்!!!

* பாதாம் எண்ணெய் அனைத்து வகையான சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. இந்த எண்ணெய் மிகவும் அடர்த்தி குறைவாக இருப்பதால், சருமமானது இதனை விரைவில் உறிஞ்சிக் கொள்ளும். ஆனால் இது மற்ற சருமத்தை விட, வறண்ட சருமத்திற்கு மிகவும் ஏற்றது. ஆகவே இதனை வைத்து தினமும் மசாஜ் செய்தால், சருமம் மென்மையாவதோடு, வெடிப்புக்கள் நீங்கி அழகாக இருக்கும்.
* உதடுகளில் வெடிப்புகள் இருக்கிறதா? அப்படியென்றால் அந்த பிரச்சனைக்கு ஒரே சிறந்த தீர்வு பாதாம் எண்ணெய் தான். இதனை ஒரு 'லிப் கிளாஸ்' மாதிரி பயன்படுத்த வேண்டும். அதற்கு 5-6 துளிகள் பாதாம் எண்ணெயுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின்பு அதனை ஒரு சிறிய டப்பாவில் போட்டு ஒரு வாரத்திற்கு உதடுகளில் வறட்சி ஏற்படும் போதெல்லாம் தடவ வேண்டும். இதனால் உதடுகளில் வெடிப்புகள் போவதோடு, உதடுகள் மென்மையாகவும், சற்று உதட்டின் நிறங்களும் கூடும்.
* முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் பொதுவாக போதிய சத்துக்கள் இல்லாததால் ஏற்படுகிறது. அத்தகைய சத்துக்களான வைட்டமின் ஏ மற்றும் பி, பாதாம் எண்ணெயில் அதிகமாக இருக்கிறது. ஆகவே அதனை அதிகம் பயன்படுத்தினால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதோடு, புதிய செல்களும் உருவாகும். இதனால் முகமானது நன்கு பொலிவோடும், இளமையான தோற்றத்தையும் தரும்.
* பாதாம் எண்ணெய் சருமத்திற்கு அதிகமான நன்மைகளை தருகிறது. அதிலும் முகத்தில் தோன்றும் கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை எளிதில் நீக்கும் அதற்கு தினமும் முகத்திற்கு பாதாம் எண்ணெயை காட்டனால் தொட்டு, முகத்தில் கண்களுக்கு அடியில் மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் முகம் முழுவதும் தடவி சற்று நேரம் மசாஜ் செய்யவும். அவ்வாறு தொடர்ந்து செய்தால், முகமானது பளிச்சென்று இருக்கும்.
* பாதாம் எண்ணெயும் ஒரு சிறந்த ஃபேசியல் ஸ்க்ரப். இதனை வைத்து முகத்திற்கு செய்யும் போது முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் வெளியேறிவிடும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது முன்பு இருந்ததை விட, செய்த பின் நன்கு அழகாக இருக்கும்.



Click it and Unblock the Notifications