தோல்நோய்களை குணமாக்கும் காட்டு எலுமிச்சை !

By Mayura Akilan

Wild Lime
நோய் தோன்றினால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்கிறோம். பழங்காலத்தில் காடுகளில்கிடைக்கும் தாவரங்களே மருந்து போல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இன்றைக்கும் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வனங்களில் கிடைக்கும் மூலிகைகளையே மருந்தாக உட்கொள்கின்றனர்.

அந்த வகையில் சிறியவகை மரமான காட்டு எலுமிச்சையானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கிழக்கு வங்கத்தினைச் சேர்ந்த இந்த மரம். தென் இந்தியா, இலங்கை நாடுகளில் காணப்படுகிறது. ஒடிசா, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அந்தமான் தீவுகளிலும் இது வளர்கிறது. இதன் இலைகள், வேர், கனிகள் மருத்துவப் பயன் கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்திலிருந்து எளிதில் ஆவியாகும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் பல வேதிப்பொருட்கள் உள்ளன. லினலுல், லினலைல் அஸிடேட், ப்ரைடிலின், எபிப்ரைடிலினால், கெம்ஃஸ்டிரால், ஸ்ட்கம ஸ்டிரலல், அட்லான்டேலைடு, அட்லாஃபெல்லைன், ஔரப்டென், மர்மிசின்

தோல் வியாதிகள்

இலைகளின் கசாயம் தோல் வியாதிகளுக்கு மருந்தாகிறது. வேர் கிருமிகளுக்கு எதிரானது. தசை பிடிப்பு வலி போக்குவது. செயல்தூண்டுவி. வீக்கங்கள் மற்றும் மூட்டுவலிகளுக்கு மருந்தாகிறது. கனிகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மேல் பூச்சாகிறது. கனிகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மேல் பூச்சாகிறது. கனிகளின் எண்ணெய் காய்ச்சல் போக்கும், பக்கவாதம் மற்றும் மூட்டுவலிக்கு தடவப்படும்.

விந்து உற்பத்தி அதிகரிக்கும்

இத்தாவரம் காய்ச்சல் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் ருசி மற்றும் பசி தூண்ட உதவுகிறது. இது உடல் வண்ணத்தை ஒளிரச்செய்யும் என்றும் விந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்க வல்லது எனவும் இராஜநிகண்டு என்னும் மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனிகள் ஊறுகாயாகத் தயாரிக்கப்படுகிறது.

Story first published: Monday, September 12, 2011, 12:25 [IST]
Desktop Bottom Promotion