Latest Updates
-
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
உங்க உச்சந்தலை வறண்டுபோய் அரிக்குதா? அப்ப 'இந்த' வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க... சரியாகிடும்!
காற்றில் ஈரப்பதம் இல்லாதது குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை உலர வைக்கும். இதனால், உங்கள் உச்சந்தலை கூட பாதிக்கப்படலாம். குளிர்காலத்தில் வறண்ட உச்சந்தலையை எதிர்த்துப் போராட சிறந்த வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
வறண்ட சருமம், உதடுகளில் வெடிப்பு, வறண்ட கூந்தல் மற்றும் வெடிப்பு பாதங்கள் ஆகியவை குளிர்காலத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளில் சில. குளிர்கால மாதங்கள் நம் தோல் மற்றும் கூந்தலுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும். அந்த வகையில், குளிர்கால பிரச்சனைகளின் பட்டியலில் வறண்ட உச்சந்தலையும் அடங்கும். இது அரிப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டவசமாக, உலர்ந்த உச்சந்தலையில் இருந்து விடுபட உதவும் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. வறண்ட உச்சந்தலைக்கு சிகிச்சையளிப்பதற்கான இயற்கையான பொருட்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் சருமத்தில் ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது உச்சந்தலையில் வறட்சி ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள். உங்கள் முகத்திலோ அல்லது உடலின் மற்ற பாகங்களிலோ எப்படி வறண்ட சருமத்தைப் பெறுகிறீர்களோ, அதே வழியில்தான் நீங்கள் உலர்ந்த உச்சந்தலையைப் பெறுவீர்கள். குளிர்காலம் என்பது காற்றில் ஈரப்பதம் இல்லாததால், சருமம் மற்றும் உச்சந்தலையில் வறட்சி ஏற்படுகிறது.
வறண்ட உச்சந்தலையின் சில பொதுவான அறிகுறிகள் உள்ளன மற்றும் அவை பொடுகுத் தொல்லையிலிருந்து வேறுபடுகின்றன. அவை பின்வருமாறு:
- பொடுகுடன் ஒப்பிடும்போது அவை அளவு சிறியதாக இருந்தாலும் உச்சந்தலையில் இருந்து செதில்களாக உதிரத் தொடங்கும்.
- உலர்ந்த உச்சந்தலையுடன் தொடர்புடைய செதில்களும் உலர்ந்த மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும்
- தொடர்ந்து அரிப்பு ஏற்படும்
- முடி உதிர்தல்
உலர்ந்த உச்சந்தலைக்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்ன?
நீங்கள் இயற்கை வழியில் செல்ல விரும்பினால், குளிர்காலத்தில் உச்சந்தலையில் ஏற்படும் வறட்சிக்கான வீட்டு வைத்தியத்தை முயற்சிக்க வேண்டும்.
தேயிலை மர எண்ணெய்
தேயிலை மர எண்ணெய் அதன் சக்திவாய்ந்த ஆண்டிசெப்டிக் பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு விளைவுகளால் உலர்ந்த உச்சந்தலைக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேயிலை மர எண்ணெய் ஹேர் மாஸ்க்கை உருவாக்க, தேங்காய் அல்லது ஜோஜோபா அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் கலந்து, உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும். ஷாம்பு போட்டு முடியை அலசுவதற்கு முன் குறைந்தது 10 நிமிடங்களுக்கு உங்கள் உச்சந்தலையில் இருக்கட்டும்.
ஆமணக்கு எண்ணெய்
வறண்ட மற்றும் அரிப்பு உச்சந்தலையை ஆற்ற இது ஒரு சிறந்த வழியாகும். கற்றாழை ஜெல்லுடன் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து, உலர்ந்த தலையில் தடவ வேண்டும். பின்னர், 30 நிமிடங்கள் கழித்து முடியை அலச வேண்டும்.
கற்றாழை
கற்றாழை ஈரப்பதம் மற்றும் அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்படுவதால் பல அழகு சாதனப் பொருட்களில் ஒரு நட்சத்திரப் பொருளாக உள்ளது. ஷாம்பு போட்டு அலசுவதற்கு முன், உங்கள் உச்சந்தலையில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்த வேண்டும். இது உங்கள் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உலர் உச்சந்தலையை அகற்ற உதவுகிறது.
ஆப்பிள் சாறு வினிகர்
உங்கள் உச்சந்தலையை உலர்த்தாமல் இருக்க, ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் சாறு வினிகர் கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி ஐந்து நிமிடம் கழித்து முடியை அலச வேண்டும்.
ஜோஜோபா எண்ணெய்
ஜோஜோபா எண்ணெய் உங்கள் உச்சந்தலையில் சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுத்தப்படுகிறது. மேலும் சிறந்த அம்சம் என்னவென்றால், அதை நீர்த்துப்போகாமல் உடனடியாகப் பயன்படுத்தலாம். ஜோஜோபா எண்ணெயை உங்கள் உச்சந்தலையில் தடவி, 10 முதல் 20 நிமிடங்கள் கழித்து, முடியை அலச வேண்டும்.
தேங்காய் எண்ணெய்
பொடுகு மற்றும் வறண்ட உச்சந்தலைக்கு தேங்காய் எண்ணெய் அதிசயங்களை செய்யும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தேங்காய் எண்ணெயை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, உங்கள் உலர்ந்த உச்சந்தலையில் தடை வேண்டும். உங்கள் தலைமுடி முழுவதும் எண்ணெயை தடவி மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது 10 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு, முடிக்கு கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.
வாழை, தேன் மற்றும் அவகேடா மாஸ்க்
வாரத்திற்கு ஒருமுறை ஈரப்பதமூட்டும் ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உச்சந்தலையின் சருமத்தை ஈரப்பதமாக்கலாம் மற்றும் உங்கள் உச்சந்தலையில் தடையைப் பாதுகாக்கலாம்.
உங்களுக்கு தேவையானது ஒரு வாழைப்பழம், தேன் மற்றும் ஒரு அவகேடா பழம். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மசித்து, பேஸ்ட்டாக உருவாக்க வேண்டும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி, ஒரு ஷவர் கேப் போட்டு மூடவும். 30 நிமிடங்கள் கழித்து முடியை அலச வேண்டும். இந்த இயற்கை பொருட்கள் உங்கள் உச்சந்தலையின் நன்மையை பாதுகாக்க உதவும்



Click it and Unblock the Notifications












