Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம்
வீட்டிலேயே காணப்படும் 5 மிகச்சிறந்த மேக்கப் நீக்கும் பொருட்கள்!!!
ஒளி பொருந்தியவாறும், பார்வைக்கு பளிச்சிடும் வகையிலும இருக்கும் சருமத்தை பெற வேண்டுமானால், அதை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். இவ்வாறு சருமத்தை பாதுகாக்கும் பொருட்களை கவனத்தில் வைத்திருப்பதும், பராமரிப்பதும் இன்றியமையாத விஷயமாகும்.
நம்முடைய இயற்கையான தோற்றத்தை மேக்கப் போடுவதன் மூலம் மெருகூட்ட முடியும் என்றாலும், அதனை முறையாக நீக்காவிடில் மிகவும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்பதை மறந்து விடக் கூடாது. உங்களுடைய மேக்கப்பை கலைக்காமல் தூங்கினால் தோலில் உள்ள துளைகள் அடைத்துக் கொள்ளவும் மற்றும் அரிப்புகள் வரவும் செய்யும். அது மட்டுமல்லாமல், இளநரை வந்து உங்களுடைய அழகு பாழ்படவும் செய்யும். எனவே, நீங்கள் இரவு தூங்கும் முன்னர் மேக்கப்பை கலைத்து விடுவது நல்ல பலன் தரும்.
செயற்கையான மேக்கப் நீக்கும் சாதனங்கள் மிகவும் பிரபலமாகவும், எளிதில் கிடைக்கும் வகையிலும் இருக்கும் வேளையில், இயற்கையான வழிமுறைகளை நீங்கள் நாடிச் செல்லவும் முடியும். இந்த கட்டுரையில் உங்கள் வீட்டிலேயே கிடைக்கக் கூடிய 4 வகையான மேக்கப் நீக்கும் சாதனங்களை அடையாளம் காட்ட நாங்கள் உதவுகிறோம்.
இவற்றால் சருமத்திற்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு விளைவிக்காத பொருட்களாக இருக்கும் இவை, பாதுகாப்பானவையாகவும், இயற்கையானவையாகவும் உள்ளன.

பாதாம் பால்
பாதாம் கொட்டையிலிருந்து பாதாம் பால் தயார் செய்யப்படுகிறது. பிற பால் வகையறாக்களைப் போல், பாதாம் பாலில் லாக்டோஸ் இருப்பதில்லை. உரிக்கப்பட்ட பாதாம் கொட்டைகளை எடுத்து, நன்றாக வெளிரும் வகையிலும், கிரீம் போலவும் அரைத்துக் கொள்ளவும். நாள் முழுவதும் உடலில் தங்கியிருக்கும் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு மற்றும் மேக்கப்பை நீக்கவும் மற்றும் இயற்கையாகவே சுத்தம் செய்யும் கரைசலாகவும் பாதாம் பால் உள்ளது. இவ்வாறு மேக்கப்பை நீக்கும் போது, சிறிதளவு பாதாம் பாலை எடுத்து ஒரு பருத்தி துணியை உருண்டையாக சுற்றி அதில் நனைத்து, முகம் முழுவதும் வட்ட வடிவில் தேய்த்து சுத்தம் செய்யவும். இவ்வாறு தேய்த்து விட்டு முகத்தை நன்றாக கழுவவும். அதிகபட்சமாக இருக்கும் பாதாம் பாலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்து, ஒரு வாரத்திற்குள் பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயின் ஈரப்பதத்தை நிறுத்தி வைக்கும் குணம், உங்கள் முகம் வறண்டு போகாமலும் மற்றும் சோர்வடையாமலும் இருக்கச் செய்ய உதவும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும் வெள்ளரிக்காய் உதவுவதால், செயற்கையான மேக்கப் நீக்கும் சாதனங்களை தேடிச் செல்வதை தவிர்க்கலாம். நீங்கள் வெள்ளரிக்காய் சாற்றைக் கொண்டு உங்கள் முகத்தை கழுவலாம் மற்றும் வெள்ளரிக்காயை எடுத்து நன்றாக அரைத்து அந்த கலவையை முகத்தில் பசை போல தேய்த்து ஒட்டிக் கொள்ளவும் செய்யலாம்.

சோயா பால் மற்றும் வாழை
சோயா பால் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றின் கலவை மேக்கப் சாதனங்களை நீக்க மிகவும் இயற்கையான வழிமுறையாக உள்ளது. இந்த கலவையில் உள்ள என்சைம்கள் மேக்கப்பை கரைக்கவும் மற்றும் முகத்தில் தங்கியிருக்கும் அழுக்கை நீக்கவும் உதவுகின்றன. இந்த கலவையை உருவாக்கும் போது, வாழைப்பழத்தை துண்டு துண்டாக வெட்டி, சோயா பாலுடன் கலந்து கொள்ளவும். இந்த இரண்டும் ஒன்றாக நன்றாக கலக்கும் வகையில் கலந்து விட்டு, முகம் முழுவதும் தடவி விடுங்கள். இந்த கலவையை சில நிமிடங்கள் முகத்தில் தடவி விட்டு, நன்றாக கழுவுங்கள்.

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் உங்களுக்கு அகமும், புறமும் உதவக் கூடிய சுகாதாரமான எண்ணெயாகும். இயற்கையான பொருளாகவும், சிராய்ப்புகள் தராமலும் இருக்கும் இந்த எண்ணெய் சிறந்த மேக்கப் நீக்கும் சாதனமாகவும் உள்ளது. ஆலிவ் எண்ணெயை தனியாகவும் அலல்து காட்டுச் செடியுடன் () கலவையாகவும் கலந்து பயன்படுத்தலாம். காட்டுச்செடியுடன், ஆலிவ் எண்ணெயை கலந்து கிடைக்கும் கலவைக்கு சுருக்கங்களை கட்டுப்படுத்தும் குணமும், ஈரப்பதத்தை ஏற்படுத்தும் குணமும் உள்ளன. இந்த கலவை சரும துளைகள் அடைத்துக் கொள்வதை தவிர்க்கவும் மற்றும் மோசமான மேக்கப்பை நீக்கும் குணங்களும் உள்ளன.

தேங்காய் எண்ணெய்
மிகவும் நன்றாக கரையக் கூடிய கொழுப்புகளை கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெய், வறண்ட தோலை ஈரப்பதமாக வைத்திருக்கும் குணமும் கொண்டுள்ளது. மிகவும் கடினமாக இருக்கும் மேக்கப்பை, குறிப்பாக கண்களில் இருக்கும் மேக்கப்பை தேங்காய் எண்ணெய் நீக்கி விடுகிறது. மேலும், மேக்கப்பை தளர்த்தி விட்டு, பூஞ்சைகள் மற்றும் வைரஸ்களை நீக்கவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது. எனவே, தேங்காய் எண்ணெயை நீங்கள் சிறந்த ஈரப்பதமூட்டும் பொருளாகவும் மற்றும் சரும பாதுகாப்பு பொருளாகவும் மேக்கப்பை கலைத்த பிறகு சருமத்தில் போட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு
மேற்கூறிய பொருட்களை நீங்கள் உங்கள் வீட்டிலேயே கண்டறிய முடியும் என்பதால், இவற்றை எளிதில் முயற்சி செய்து பார்க்கலாம். அதன் பின்னர், நீங்கள் புதிதாக மேக்கப் நீக்கும் சாதனங்களை வாங்க வேண்டிய அவசியம் கூட இருக்காது!



Click it and Unblock the Notifications











