Latest Updates
-
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மேக்-கப் போட்டாலும், எண்ணெய் பசை அதிகமா இருக்கா?
நிறைய பேர் முகத்தில் எண்ணெய் பசை தெரியக்கூடாது என்று தான் மேக்-கப் அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு மேக்-கப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். வேண்டுமெனில் நடிகைகள் பலரை பல விழாக்களின் போது பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயில் மேக்-கப் தான் அதிகம் போடுவார்கள். ஆம், மேக்-கப்பில் ஆயில் மேக்-கப் என்று ஒன்று உள்ளது. அதிலும் நயன்தாரா, பிரியாமணி போன்ற நடிகைகள், இத்தகைய மேக்-கப்பை அதிகம் போடுவார்கள்.
ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-கப் போடாமல், சாதாரண மேக்-கப் போட்டாலே எண்ணெய் வழியும். இவ்வாறு அதிக எண்ணெய் பசையுடன் தெரிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மேக்-கப் போடும் முன் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களை செய்யாமல் போடுவது மற்றும் அதிக எண்ணெய் பசை சருமம் இருப்பதும் சில காரணங்கள். மேலும் இவ்வாறு மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது போன்ற தெரிந்தால், அது முதுமைத் தோற்றத்தை தரும். எனவே இத்தகைய தோற்றத்தை தவிர்க்க, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.

முகத்தை கழுவுவது
மேக்-கப் போடும் முன் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-கப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும்.

ஸ்கரப்
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-கப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-கப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.

ஐஸ் கட்டி
மேக்-கப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-கப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

நீர்ம ஃபௌண்டேஷன்
மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருந்தால், மேக்-கப்பின் போது நீர்ம ஃபௌண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக ஃபௌண்டேஷன் பவுடரைப் பயன்படுத்தலாம்.

கன்சீலர்
ஒருவேளை ஃபௌண்டேஷன் பவுடராக இருந்தால், கன்சீலரை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுவாக கன்சீலர்கள் ஆயில் மாதிரி இருக்கும். எனவே அளவாக பயன்படுத்தினால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

பவுடர்
மேக்-கப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.

டிஸ்யூ பேப்பர்
எப்போதும் டிஸ்யூ பேப்பரை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை வைத்து அவ்வப்போது முகத்தை துடைத்தால், முகத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் மேக்-கப்பை கலைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications