Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
கோடையில் அழகாக இருக்க வேண்டுமா?

குளிர்ச்சியாக்குங்கள்
மேக்-அப் போடும் போது நல்ல இயற்கை வெளிச்சத்தில் போடவும். லைட் வெளிச்சத்தில் உங்கள் மேக்-அப் சரியாக தெரியாமல் வேறு விதமாக காட்டக்கூடும். மேக்-அப் போட்டுக் கொள்வது பெரிய விஷயமில்லை. ஆனால் மேக்-அப் போட்ட அடுத்த நிமிடமே வெளியே கிளம்பி விடாதீர்கள். போக வேண்டிய நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மேக்-அப் போட்டு விடுங்கள். அப்போது தான் அது சருமத்துடன் சேர்ந்து அழகாக, இயற்கையாக தெரியும். இல்லாவிட்டால், பெயிண்ட் அடித்த மாதிரி தான் தெரியும். மேக்-அப் போட்டு முடித்த பிறகு ஜில்லுனு ஜூஸ் ஏதாவது குடியுங்கள் அது உடலை குளிர்ச்சியாக வைக்கும்.
மஸ்காரா போடுங்க
திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி போன்ற விழாக்களுக்கு செல்லும்போது மட்டுமே பிளஷர் உபயோகிக்கவும். மற்றபடி முக்கிய இடங்களுக்கு செல்லும் போது அது வேண்டாம். மஸ்காரா உபயோகிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் நிறைய கோட் தடவினால் செயற்கையாக தெரியும். ஒன்றிரண்டு கோட்டோடு நிறுத்திக் கொள்ளவும். இன்டர்வியூ போகிற போது உடைகளுக்கு மேட்ச்சாக ஐஷேடோ மற்றும் மஸ்காரா உபயோகிப்பதை தவிர்க்கவும். அது உங்களை நவ நாகரிக பெண்ணாக காட்டினாலும், அந்த இடத்திற்கு ஒத்து வராது.
வாட்டர் புரூப் மேக் அப்
பகல் வேலைகளில் முக்கிய இடங்களுக்குச் செல்லும் போது அளவுக்கதிகமாக மேக்-அப் போட வேண்டாம். அதே மாதிரி அனைத்து மேக்-அப் பொருட்களும், சன் ஸ்கிரீன் கலந்ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இப்போது ஐலைனர், மஸ்காரா, லிப்ஸ்டிக் என எல்லாமே வாட்டர் புரூப் ரகத்தில் கிடைக்கின்றன. இவற்றை உபயோகித்தால் வியர்வையோ, தண்ணீரோ பட்டால் மேக்-அப் கலையாமல் அப்படியே இருக்கும்.
புத்துணர்ச்சி அழகு
பவுன்டேஷன், காம்பேக்ட் பவுடர் போன்றவற்றை எப்போதும் கைப் பையில் வைத்திருங்கள். நீங்கள் போன காரியம் தாமதமாகும் என தெரிந்தால் மறுபடி ஒருமுறை டச்-அப் செய்து கொள்ளலாம். வேலை முடிந்து அங்கிருந்து நேராக ஏதேனும் முக்கிய இடத்திற்கோ, தியேட்டருக்கோ செல்ல வேண்டுமா கவலை வேண்டாம். கண்களுக்கு மட்டுமாவது மேக்-அப் போட்டுக் கொள்ளுங்கள் புத்துணர்வோடு திகழ்வீர்கள்.



Click it and Unblock the Notifications