Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
முடி பிரச்சனையா? கவலைய விடுங்க.. இந்த உருளைக்கிழங்கு சாற்றை ட்ரை பண்ணுங்கள்..!
உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு கிழங்கு வகை காய்கறியாகும்.. இது நம் அனைவரின் உணவு முறையில் அடிப்படையாக உபயோகிக்கும் காயாகும்.. இதை உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு சமையலறையிலும் காண முடியும்..
இது மிகவும் பரவலாக உட்கொள்ளப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். சத்தான உணவுகளில் நான்காவது இடத்தை உருளைக்கிழங்கு பெற்றுள்ளது என்றால் நம்புவீர்களா? . உருளைக்கிழங்குக்கு முன், அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் ஆகியவை உலக உணவின் முக்கிய அங்கமாக இருந்தன.

அப்படிப்பட்ட இந்த உருளை கிழங்கு அழகு குறிப்புகளுக்கு பயன்படுகிறது தெரியுமா? ஆனால் அது உண்மைதான். உருளைக்கிழங்கை அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தலாம். முகத்திற்கும் நம் கூந்தலுக்கும் இது பயன்படுகிறது.. அந்த வகையில் முடி நன்றாக வளர நம் கூந்தலுக்கு இதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
உருளைக்கிழங்குடன் முடி அழகு குறிப்புகள்
1. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து நன்றக அரைத்து அதன் தண்ணீரை பிழியவும். அதில் முட்டை மற்றும் தயிர் கலக்கவும். பின்னர் ஒரு நல்ல பேக் செய்யப்படுகிறது. முடி மற்றும் முழு முடி வேர்களுக்கு இதை அப்ளை பண்னவும்.. பின்னர் இதை 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீர் மற்றும் சாதாரண ஷாம்பூவுடன் அலசிவிட வேண்டும்.. இதை 20 நாட்களுக்கு ஒருமுறை செய்து வர நல்ல கருமையான கூந்தல் வளரும்.. இந்த பேக் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடியை அளிக்கிறது.
2. உருளைக்கிழங்கை வட்டமாக தோலுடன் கட் பண்ணி வைக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உருளைக்கிழங்குத் தோல்களைச் சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது இந்த தண்ணீரை ஏதேனும் பாத்திரத்தில் வடிகட்ட வேண்டும். பின்னர் அநத சாற்றை உங்கள் கூந்தலில் அபளை பண்ணுங்கள்.. அதன் பிறகு சாதாரண ஷாம்பூவுடன் முடியை அலசிவிட வேண்டும்.. பின், வேகவைத்த மற்றும் வடிகட்டிய நீரில் கழுவவும். இது உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கருப்பு நிறத்தை கொடுக்க உதவுகிறது. நரை முடிக்கு இது ஒரு நல்ல மற்றும் இயற்கையான சிகிச்சையாகும்.
3. முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் பிரச்சனையை தீர்க்க வீட்டிலேயே செய்ய வேண்டிய அழகு செய்முறையை இப்போது தெரிந்துக் கொள்ளலாம்.. . உருளைக்கிழங்கு சாறு மூன்று ஸ்பூன், கற்றாழை சாறு மூன்று ஸ்பூன், தேன் இரண்டு ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து. இந்த கலவையை உச்சந்தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து வழக்கமான ஷாம்பு கொண்டு முடியை அலசி விடவும்... வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த 3 முறைகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்து வந்தாலே போதுமானது.. உங்களின் கூந்தல் நன்கு கருமையாக ஆரோக்கியமாக வளர்ந்து வருவதை நீங்களே உணரலாம்...



Click it and Unblock the Notifications











