Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
முகப்பரு பிரச்சனையை ஒரே நாளில் சரி செய்யணுமா? இந்த சிம்புள் வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்..!
பொதுவாகவே பெண்களுக்கு எழுந்ததும் மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்துவது முகத்தில் உள்ள பருக்கள்தான். இரவில் அழகாக இருக்கும் முகம் காலையில் பருக்களுடன் காணப்பட்டால், கடுப்பாக இருக்கும்.. முகப்பரு நம் அழகுக்கு எதிரி.. தேவையற்ற பருக்கள் அழகைக் கெடுக்கும். முகத்தில் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் முகப்பரு வருவது சகஜம்தான் என்றாலும் அவற்றை சரி செய்வதும் முக்கியம்..
முகத்தில் திடீரென தோன்றும் பருக்கள் பல பெண்கள் மற்றும் டீனேஜ் பெண்களின் கவலையாக உள்ளது. சில ஆண்களும் இந்த முகப்பரு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். அவை முகத்தின் அழகை அழித்துவிடும். குறிப்பாக பெண்கள் தங்கள் முகப்பருவை மற்றவர்களுக்கு காட்ட வெட்கப்படுவார்கள். இந்த பிரச்சனை இன்னும் சிறப்பு சந்தர்ப்பங்களையும் மக்களையும் வேட்டையாடுகிறது.

முகப்பருவைப் போக்க கிரீம்கள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லதல்ல. இந்த முடிவுகள் தற்காலிகமானவை மட்டுமே. இவற்றைப் பயன்படுத்திய பிறகு முகப்பரு மீண்டும் வரும். எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண இயற்கை வழியை தேர்ந்தெடுப்பதே சிறந்த வழி. இன்று முகப்பருவைப் போக்க சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க....
மஞ்சள் மற்றும் துளசி இலைகள்
மஞ்சள் தூள், சில துளசி இலைகள் மற்றும் கற்பூரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட் செய்து கொள்ளவும். இரவில் தூங்கும் முன் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி காலையில் கழுவவும்.
நிலக்கடலை -துளசி இலைகள்
துளசி இலைகளை ஒரு பேஸ்ட் செய்து ஒரு பெரிய கிண்ணத்தில் எடுத்து, இந்த பேஸ்டுடன் சிறிது உளுத்தம் மாவு சேர்க்கவும். துளசி இலைகளின் பேஸ்ட்டில் தண்ணீருக்குப் பதிலாக ரோஸ் வாட்டர் சேர்க்கப்படுவது சிறந்த பலன் தரும்.. இந்த பேஸ்ட்டை கருமையான முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி அரை மணி நேரம் உலர வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். ஆனால் சோப்பு பயன்படுத்த வேண்டாம்.
பால் மற்றும் புதிய எலுமிச்சை சாறு
காய்ச்சிய பாலில் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். இந்த கலவை உலர்ந்த சருமத்தை மென்மையாக்குகிறது. முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் வராமல் தடுக்கிறது. சூடான அல்லது குளிர்ந்த பாலில் 2-3 துளிகள் புதிய எலுமிச்சை சாற்றை கலக்கவும். பின்னர் ஒரு பஞ்சை எடுத்து பால் மற்றும் எலுமிச்சை சாறு கலவையில் தோய்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். அரை மணி நேரம் கழித்து உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
அரிசி தண்ணீர்
சமைத்த அரிசி தண்ணீரை (கஞ்சி) ஒரு கொள்கலனில் சேமிக்கவும். இந்த நீரில் முகத்தை அடிக்கடி கழுவி வர வேண்டும்.. இந்த தண்ணீரின் இயற்கையான பண்புகள் முகம் மற்றும் சரும பிரச்சனைகளை நீக்கி சருமத்தை பொலிவாக்க உதவுகிறது.
தக்காளி
தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. முகப்பருவைப் போக்கவும், தோல் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கவும் இது ஒரு சிறந்த வழியாகும். தக்காளியை நறுக்கி, சாற்றை நேரடியாக பருக்கள் மீது தடவவும். தக்காளி சாற்றை பருக்கள் மீது தடவினால் பருக்கள் மற்றும் தழும்புகள் நீங்கும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பப்பாளி
இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான தோல் பராமரிப்பு பொருட்களில் பப்பாளி உள்ளது. இது முகப்பருவுக்கு நல்ல மருந்தாகும். பப்பாளி பேஸ்ட் செய்யவும். இதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருக்கவும். முற்றிலும் உலர்த்திய பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். முகப்பருவைத் தடுக்க இது ஒரு நல்ல முறையாகும்.



Click it and Unblock the Notifications











