Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
செயற்கை நுண்ணறிவு (AI) ஹோமியோபதியை பயன்படுத்தி சருமத்தை எப்படி இளமையாக வைக்கலாம் தெரியுமா?
Homeopathy With Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவு என்பது இப்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. உலகளவில் இந்த தொழில் நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. வேலை பார்க்கும் இடத்தில் மட்டுமல்ல இந்த செயற்கை நுண்ணறிவு தற்போது அழகுத் துறையிலும் தன்னுடைய காலடியை பதித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மருத்துவம் மட்டுமல்ல தற்போது எல்லாத் துறையிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த AI செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை கண்டறிய முடியும். நோயின் அறிகுறிகளை கூடிய விரைவில் கண்டறிய முடியும்.

செயற்கை நுண்ணறிவு மூலம் உங்கள் சருமத்தைக் கண்காணிக்கவும், சருமப் பிரச்சினைகளை சரி செய்யவும் இனி வரும் காலத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உங்க சரும அழகை எப்படி மேம்படுத்தலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
இந்தியாவின் அழகுத் துறையில் AI தொழில் நுட்பம்
இந்தியாவில் முதல் முறையாக டாக்டர் பாத்ராஸ் ஹெல்த்கேர் ஹோமியோபதி மருத்துவத்துடன் கூடிய AI சரும சிகிச்சையைக் கொண்டு வருகிறார். இவர் தோல் பிரச்சினைகளைக் கண்டறியும் AI இயங்கு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவில் இருந்து வந்துள்ள இந்த சாதனம் தோல் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்வதோடு தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு எதிர்கால வழிமுறையாக உள்ளது.
ஹோமியோபதியுடன் AI சிகிச்சை
இந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய AI சாதனம் தோலின் மேற்பரப்பில் தோல் பிரச்சினைகள் தோன்றுவதற்கு முன்பே கண்டறிய உதவி செய்யும். இந்த ஹோமியோபதியுடன் கூடிய AI சிகிச்சையானது முழுமையானது, பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவுகள் இல்லாதது. இது உங்கள் சருமத்திற்கு மேம்பட்ட சிகிச்சையை அளிக்கிறது.
சிகிச்சை முறைகள்
உங்கள் சரும பிரச்சனைகளுக்கு ஏற்ற வகையில் தனித்தனியே சிகிச்சை அளிக்க முடியும். உதாரணமாக முகப்பருக்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு AI ஹோமியோ கிளியர், சருமத்தில் நிறமி குறைபாடு இருப்பவர்களுக்கு AI ஹோமியோ பிரைட் சிகிச்சையும், சருமம் வயதாகுதல் பிரச்சினை இருப்பவர்களுக்கு AI ஹோமியோ யூத் சிகிச்சையும், பல்நோக்கு சிகிச்சைகளுக்கு AI ஹோமியோ ரெனியூ சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது.
ஹோமியோபதி 250 ஆண்டு பழமையான மருத்துவ முறையாகும். இந்த பழமையான மருத்துவ முறையுடன் AI இணைந்துள்ளது. எனவே இந்த AI தொழில் நுட்பம் மூலம் இனி வரும் காலங்களில் உங்கள் சரும பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விரட்ட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
AI ஸ்கின் ப்ரோ
இந்த AI இயந்திரம் பல லேசர் கேமராக்களுடன் பொருத்தப்பட்டு வருகிறது. இது முகத்தை பல கோணங்களில் படம் பிடித்து தோலின் வெளிப்புற அடுக்குகளில் ஊடுருவி தோலின் உள் அடுக்குகளில் நிறமி மற்றும் ஏதேனும் சரும பிரச்சனைகள் உருவாகுவதைக் கண்டறிய உதவுகிறது.



Click it and Unblock the Notifications











