நீளமான & அடர்த்தியான முடியை பெற ஆயுர்வேத முறைப்படி இந்த 4 இயற்கை பொருட்கள யூஸ் பண்ணா போதுமாம்!

பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்படும் முற்றிலும் இயற்கையான ஷாம்பு ரீத்தா ஆகும். இது மிகவும் மெலிந்து போன முடி உள்ளவர்களுக்கானது.

இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனையாக தலைமுடி பிரச்சனை உள்ளது. நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் நாம் உட்க்கொள்ளும் உணவுகள் கூட நம் தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் தலைமுடி மிகவும் மெல்லியதாகி, அது தொடர்ந்து சிக்குண்டு சேதமடையும் போது நீங்கள் அதை வெறுக்கவில்லையா? மாசுபாடு, ரசாயன அடிப்படையிலான ஷாம்புகள் மற்றும் மோசமான நீரின் தரம் ஆகியவை முடியின் தரம் மோசமடைய பங்களிக்கும் காரணிகளாகும். இப்போதெல்லாம் மக்கள் அடிக்கடி முடி உதிர்தல் மற்றும் மோசமான முடி வளர்ச்சியை அனுபவிக்கின்றனர்.

natural products to increase hair volume according to Ayurveda in tamil

பழங்கால ஆயுர்வேதத்தில் நாம் பயன்படுத்தி வந்த இயற்கை வேர்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. ஏனெனில், இது முடி வளர்ச்சி மற்றும் அளவை மீட்டெடுக்க பல நுட்பங்களை உங்களுக்கு வழங்கும். உங்கள் முடியின் அளவை அதிகரிக்க உதவும் சில இயற்கை தீர்வுகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

முடி உதிர்வை கட்டுப்படுத்த கற்றாழை ஒரு இயற்கையான தீர்வு. இது உங்கள் உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது மற்றும் ஊட்டமளிக்கிறது. எனவே, இது உங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், ஷாம்பு போட்டு உங்கள் தலைமுடியை நன்கு அலசவும். இந்த 2 சிறிய படிகளை தொடர்ந்து பின்பற்றினால், உங்கள் முடி உதிர்தல் சந்தேகத்திற்கு இடமின்றி குறைக்கப்படும். முடி நன்றாக வளரும்.

ரீத்தா

ரீத்தா

பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்படும் முற்றிலும் இயற்கையான ஷாம்பு ரீத்தா ஆகும். இது மிகவும் மெலிந்து போன முடி உள்ளவர்களுக்கானது. இந்த ஷாம்பூவைத் தயாரிக்க, உங்களுக்கு ஆம்லா, ரீத்தா மற்றும் ஷிகாகாய் ஆகியவை 1:1:1 என்ற விகிதத்தில் தேவைப்படும். அடுத்து, நீங்கள் செய்ய வேண்டியது அனைத்தையும் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின்னர், குளிர வைத்து இந்த தண்ணீரை உங்கள் தலைமுடியில் பயன்படுத்தவும். இந்த பொருட்கள் உங்கள் தலைமுடிக்கு அனைத்து இயற்கையான நன்மைகளையும் வழங்கும். அதே வேளையில் வேர்களை வலுப்படுத்தி உச்சந்தலையை ஊட்டமளிக்கும்.

திரிபலா

திரிபலா

திரிபலா சூர்ணாவில் உள்ள ஆம்லா மற்றும் ஹரிடகி போன்ற செயலில் உள்ள பொருட்கள் சேதமடைந்த முடியை சரிசெய்து முடியின் அளவை அதிகரிக்கின்றன. ஹரிடகி போன்ற அதன் மூலப்பொருளின் செயலில் உள்ள ஃபார்முலா பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு திறன்களைக் கொண்டுள்ளது. இது உச்சந்தலையைப் பாதுகாக்கிறது மற்றும் பொடுகை போக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயுடன் திரிபலா பொடியை உங்கள் தலைமுடியில் தடவலாம் அல்லது உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இரண்டு பிரச்சனைகளை தீர்க்கும்

இரண்டு பிரச்சனைகளை தீர்க்கும்

உங்கள் உடலின் மற்ற பாகங்களைப் போலவே, உங்கள் முடியின் ஆரோக்கியமும் கூட உங்கள் உணவின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் மோசமான செரிமானம் உங்கள் முடியின் அளவு குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். திரிபலா செரிமான மண்டலத்தை நச்சுத்தன்மையாக்குவதன் மூலம் இரண்டு பிரச்சினைகளையும் தீர்க்கிறது.

பிராமி

பிராமி

இந்த ஆயுர்வேத அதிசய செடி உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யலாம். பிராமி பொதுவாக மன அழுத்தத்தை போக்கவும் மனதை அமைதிப்படுத்தவும் பயன்படுகிறது. ஆனால் இது முடி பராமரிப்பு மற்றும் ஒப்பனை நன்மைகளையும் கொண்டுள்ளது. உலர்ந்த மற்றும் சேதமடைந்த உச்சந்தலைக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் முடி உதிர்வைத் தடுக்க இது உதவும். பொடுகு, அரிப்பு மற்றும் பிளவு முனை போன்ற முடி பிரச்சினைகளை குணப்படுத்தவும் பிராமி பயன்படுத்தப்படலாம். பிரம்மி எண்ணெயைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வதும் மிகவும் நிம்மதியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, September 2, 2022, 16:30 [IST]
Desktop Bottom Promotion