Just In
- 3 min ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 3 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 8 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 11 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்க முடி ரொம்ப வறண்டு இருக்குதா? அப்ப இந்த 2 பொருளை வாரத்துக்கு 2 முறை யூஸ் பண்ணுங்க...
நம் வீட்டு சமையலறையில் உள்ள 2 பொருளை வைத்தே தலைமுடியின் வறட்சியைப் போக்கலாம். அது வேறொன்றும் இல்லை முட்டை மற்றும் தயிர் தான். இவை இரண்டுமே தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களைக் கொண்டவையாகும்.
குளிர்காலத்தில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தலை முடி வறண்டு பொலிவிழந்து இருப்பது தான். பொதுவாக தலைமுடி அழகாக பொலிவோடும் மென்மையாகவும் இருந்தால், அதுவே ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டும். முன்பெல்லாம் தலைமுடியை இயற்கை பொருட்களைக் கொண்டு நம் முன்னோர்கள் பராமரித்து வந்தார்கள். ஆனால் தற்போது பியூட்டி பார்லருக்கு சென்று தங்கள் முடிக்கு கெமிக்கல் கலந்த பொருட்களால் பராமரிப்பை மக்கள் கொடுத்து வருகிறார்கள். இதனால் பலர் தலைமுடி உதிர்வை சந்திக்கிறார்கள்.
நீங்கள் உங்கள் தலைமுடி அதிகம் வறண்டு இருப்பது போல் உணர்ந்தால், அதற்காக கவலைப்பட வேண்டாம். நம் வீட்டு சமையலறையில் உள்ள 2 பொருளை வைத்தே தலைமுடியின் வறட்சியைப் போக்கலாம். அது வேறொன்றும் இல்லை முட்டை மற்றும் தயிர் தான். இவை இரண்டுமே தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களைக் கொண்டவையாகும். இப்போது இந்த பொருட்களை வைத்து தலைமுடிக்கு எப்படியெல்லாம் ஹேர் மாஸ்க் போடலாம் என்பதைக் காண்போம். குறிப்பாக இந்த ஹேர் மாஸ்க்குகள் சுருட்டை முடி உள்ளவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
முட்டை, ஆலிவ் ஆயில் மற்றும் தயிர்
ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியின் வேர்களில் இருந்து முடியின் முனை வரை தடவி 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலைமுடியின் வறட்சி நீங்கி, முடி நன்கு மென்மையாக இருக்கும்.
தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலையில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் இதில் உள்ள தயிர் மற்றும் தேன் முடியின் வறட்சியைப் போக்கும், எலுமிச்சை பிசுபிசுப்புத்தன்மையைக் குறைக்கும்.
முட்டை மற்றும் விளக்கெண்ணெய்
ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை தலைமுடியில் நன்கு தடவி 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு அலச வேண்டும். இதனால் விளக்கெண்ணெய் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும், முட்டையில் உள்ள புரோட்டின், தலைமுடியை வலிமையாக்கும்.
வாழைப்பழம், பால் மற்றும் முட்டை
ஒரு பௌலில் நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பால் மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தலைமுடியில் தடவி 45 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலைமுடியின் வறட்சி நீங்கி, முடி நன்கு மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தயிர் மற்றும் கற்றாழை
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் வேர் முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இதனால் முடி நன்கு மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.