Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
முடி கொட்டுதா? இத தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமடங்கு வேகத்தில் தலைமுடி வளருமாம்...
தலைமுடி உதிர்வால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஒரு விஷயத்தை தினமும் தவறாமல் செய்யுங்கள் போதும். அது என்னவென்றால் ஒருசில உணவுப் பொருட்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
இன்று பலரது கவலைகளில் உடல் பருமனுக்கு அடுத்தப்படியாக தலைமுடி பற்றிய கவலை உள்ளது. ஏனெனில் பலர் தலைமுடி உதிர்வால் தங்களின் தலைமுடியை இழந்து வருகிறார்கள். தலைமுடி உதிர்வதற்கு மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை முக்கிய காரணமாக உள்ளது. அதோடு மோசமான உணவுப் பழக்கங்களால் உடலுக்கு மட்டுமின்றி தலைமுடிக்கும் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் முடியின் வலிமைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், தலைமுடி கொத்து கொத்தாக உதிர ஆரம்பிக்கிறது.

நீங்கள் இதுப்போன்று தலைமுடி உதிர்வால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஒரு விஷயத்தை தினமும் தவறாமல் செய்யுங்கள் போதும். அது என்னவென்றால் ஒருசில உணவுப் பொருட்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் தலைமுடியின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.

கறிவேப்பிலை
ஏற்கனவே கறிவேப்பிலை தலைமுடிக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளதால், இது தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். அதற்கு 3-4 கறிவேப்பிலை இலைகளை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் ஓரிரு நாட்களில் தலைமுடியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆளிவிதை
ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஏராளமான அளவில் உள்ளது. எனவே இது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதற்கு ஆளிவிதையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, அந்நீரை மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளிவிதை பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.

வேப்பிலை
வேப்பிலை ஒரு அற்புதமான மருத்துவப் பொருள். வேப்பிலையை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதற்கு வேப்பிலையை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

இளநீர்
இளநீர் இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம். இது தலைமுடி, சருமம் மற்றும் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தலையில் போதுமான இரத்த ஓட்டம் இல்லாவிட்டால் தான் தலைமுடி உதிரும். ஆனால் இளநீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, தலைமுடியும் வலுவாகும்.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது தலைமுடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதற்கு சிட்ரஸ் பழ ஜூஸை காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஆனால் இந்த ஜூஸை வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications