Just In
- 13 min ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 42 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
முடி உதிர்வை தடுத்து உங்கள் தலைமுடியை வலுப்படுத்த வேண்டுமா? இதோ உடனடி தீர்வுகள்!!
தலைமுடியை அடர்த்தியாக பராமரிக்க உங்களுக்கு உபயோகமாக இருக்கும் குறிப்புகளை இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமுடியை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. எல்லா வயதினருக்கும், அவர்கள் அழகை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு அவர்கள் தலை முடிக்கு உண்டு. குறிப்பாக
இளைஞர்கள் அவர்கள் முடியை வளர்ப்பதிலும் அதை அலங்காரம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். சுவரை வைத்து தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல ஆரோக்கியமான தலை முடி இருந்தால் மட்டுமே பலவகை முடி திருத்தங்களை செய்து கொள்ள முடியும்.
இன்றைய பொருளாதார தேவைகளினாலும்,தினசரி வாழ்வியல் பிரச்சனைகளாலும் ஏற்படும் மன அழுத்தங்கள் முடி உதிர்தலுக்கு காரணமாகின்றன. இந்நாட்களில் வயது
வேறுபாடின்றி எல்லா வயதினருக்கும் முடி உதிர்தல் ஒரு அசச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது .
முடி உதிர்தலுக்கு முக்கிய காரணம், மாசு கலந்த சுற்றுப்புற சூழல்,தவிர்க்க முடியாத வேலை பளு, நவீன வாழ்க்கைமுறை ஆகியன. இந்த அவசர யுகத்தில்,நம்மால் நம்கூந்தலை சரிவர பராமரிக்க முடிவதில்லை. அழகுக்காகவும், நறுமனத்திற்காகவும் நாம் ரசாயனக் கலவையை முடிக்குள் செலுத்தி அவற்றின் வளர்ச்சியை தடுக்கிறோம்.
ஒரே வாரத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நிறுத்தும் ஓர் அற்புத வழி!
அதையும் தாண்டி அந்த ரசாயனம் பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளை நமக்கு விட்டுச் செல்கிறது. இதை சரி செய்ய நாம் முடி சிகிச்சை நிபுணரிடம் செல்கிறோம்.
ஆண் பெண் இருவருமே இந்த முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து மீண்டு வர இயற்கை சிகிச்சை முறைகளை பின்பற்றுவது சிறந்தது.
விளக்கெண்ணெய் எளிதாக கிடைக்கப்பெறும் எண்ணெய். இந்த எண்ணெய் எல்லா விதமான உடல் உபாதைகளுக்கும் ஒரு சிறந்த மருந்து. சிறு குழந்தைகளுக்கு காலையில் எழுந்தவுடன் தலையின் உச்சியில் விளக்கெண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல வருடங்களுக்கு முன்பு இருந்து வந்தது. இதன் மூலம் உடல் முழுதும் குளிர்ச்சி அடைகிறது.
விளக்கெண்ணையை தொடர்ந்து தேய்ப்பதால் வழுக்கை விழுவது தடைபடும். விளக்கெண்ணையை சூடாக்கி தலையில் தடவுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு ஒரு ஈர துண்டை எடுத்து தலையில்
சுற்றி 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். இதை செய்வதால் உடல் சூடு தணிந்து குளுமையாக உணர்வீர்கள். முடியும் வழுவழுப்பாகும்.
முடி அடர்த்தியாக மற்றும் மென்மையாக வளர முட்டையை பலவகையாக உபயோகப்படுத்தலாம்.