Latest Updates
-
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
வறண்ட கரடுமுரடான கூந்தலா? இதை ட்ரை பண்ணுங்க!!
கூந்தல் சிலருக்கு இயற்கையிலேயே கரடுமுரடாக இருக்கும். கடினத் தன்மையுடன், வறண்டு பார்க்க நல்ல தோற்றத்தை தராது. அதோடு சிக்கு விழுந்தால் மிகவும் சிரமமாகிவிடும். முடி உதிர்தல், பொடுகு ஆகியவை எளிதில் வந்துவிடும்.
எண்ணெய் வைத்தாலும் மீண்டும் வறட்சி ஏற்பட்டுவிடும். இதற்கு இந்த குறிப்பை ட்ரை பண்ணுங்க. பலன் கண்கூடாக காண்பீர்கள்.

தேங்காய் எண்ணெய் காலம் காலமாக நாம் பயன்படுத்தி வருகிறோம். இது சரும மற்றும் கூந்தலின் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்கிறது. அதனால்தான் நம் பாட்டி காலங்களில் இடுப்பிற்கும் கீழே ஆரோக்கியமான கூந்தலை பெற்றார்கள்.
ஆனால் இப்போது அதனை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக வாசனை கலந்த எண்ணெய்களை உபயோகிக்கிறோம். அவற்றில் தேங்காய் எண்ணெயின் வாசனை திரவியம் மட்டுமே இருக்குமே தவிர, உண்மையான தேங்காய் எண்ணெய் இருக்காது.
ஆகவே எப்போது வாங்கினாலும் இயற்கையான செக்கில் ஆட்டிய எண்ணையே மிகவும் உகந்தது. தேங்காய் எண்ணெய் வேர்கால்களை தூண்டி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
தேங்காய் பால் மிக அதிகமான புரோட்டின் கொண்டுள்ளது. மிருதுத்தன்மையை அளிக்கும். கூந்தலுக்கு மினுமினுப்பும். மென்மையும் அளிக்கும். இவ்விரண்டையும் பயன்படுத்திப் பாருங்கள். பிரகு கூந்தல் நீங்கள் சொன்னபடி கேக்கும்.
தேவையானவை :
தேங்காய் பால் - ஒரு கப் அல்லது உங்கள் கூந்தலுக்கேற்ப
தேங்காய் எண்ணெய் -அரை கப்
முட்டை - 1 ( விருப்பமானால்)
முட்டையை நன்றாக அடித்துக் கொண்டு அதில் இந்த இரண்டையும் கலந்து, தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து, தலையை அலசவும்.
பிறகு பாருங்கள் கூந்தல் எவ்வளவு மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கின்றது என்று. வாரம் ஒரு நாள் இப்படி உபயோகித்துப் பாருங்கள். நீங்களே ஆச்சரியபப்டும்படி உங்கள் கூந்தல் மாறும்.



Click it and Unblock the Notifications



