Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
தலையில் உண்டாகும் கொப்புளங்களுக்கு தீர்வு !!
தலையில் உண்டாகும் பொடுகு, வறட்சி , அரிப்பு போலவே, பருக்கள் போல் கொப்புளங்கள் உண்டாகும். அவற்றை குனப்படுத்த இயற்கை வழியில் எப்படி சிகிச்சை தரலாம் என்பதன் கட்டுரை இது.
அதிக சூட்டினால் அல்லது வியர்வையினால் பருக்கள் போன்ரு தலையில் எழுவதுண்டு. முகப்பருகக்ள் போல் தலையிலும் உண்டாகும். இது கிருமிகளினாலும், அதிக வெப்பத்தினாலும் உண்டாகக்கூடியது.

இந்த பருக்களை போக்கும் ஒரு எளிய வைத்தியம் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. பாருங்கள்.

வேப்பிலை நீர் :
வேப்பிலை கைப்பிடி எடுத்து நீரில் கொதிக்க விடுங்கள். பின்னர் ஆறியதும் வடிகட்டி அந்த நீரினால் அலசினால் அந்த பருக்கள் மாயமாகிவிடும். வாரம் 3 நாட்கள் செய்தால் போதும். விரைவில் பலன் தெரியும்.

வெந்தய இலை :
வெந்தய இலை குளிர்ச்சி தரும். சூட்டினாலும் வரும் கொப்புளங்களை ஆற்றும். வெந்தய இலையை நீர் சேர்த்து அரைத்து அதனை தலையில் தேய்க்கவும். காய்ந்த்தும் தலைமுடியை அலசுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் :
ஆலிவ் எண்ணெய் கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்து அதனுடன் சில துளி தேயிலை மர எண்ணெயை கலந்து தலையில் தேய்க்கவும். மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.

பட்டை மற்றும் தேன் :
கால் கல் பாலில் தேன் 1 ஸ்பூன் மற்றும் அரை ஸ்பூன் பட்டைப் பொடியை கலந்து முகத்தில் தேய்க்கவும். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.

எலுமிச்சை மற்றும் நீர் :
எலுமிச்சை சாறை எடுத்து அதில் நீர் சேர்த்து தலையில் த்டவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேட்ணும். வாரம் ஒருமுறை செய்தால் போதும்



Click it and Unblock the Notifications











