ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால், கூந்தலுக்கு ஏற்பட போகும் பாதிப்புக்கள்!!!

By Super

ஒரு பெண் மற்ற பெண்களிடம் முதலில் பார்க்க விரும்புவது அவர்களின் செருப்பை தான். அதற்கு பிறகு அவள் அதிகம் பார்ப்பது அவர்களின் கூந்தலை. பொதுவாக தோற்றம் அழகாக அமைவதற்கு கூந்தல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் சரியாக அமையாவிட்டால். பார்ப்பதற்கு பொலிவில்லாமல், களையிழந்து காணப்படும். அதனால் இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தலைமுடியை நேராக்கல் (Straightening), பெர்மிங் போன்ற தலைமுடி சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

அழகை அதிகரிக்க விலை உயர்ந்த சிகிச்சைகளான இவைகளை மேற்கொண்டால், கூந்தலின் அமைப்புத் தரம் மேன்மேலும் அதிகரிக்கப்போவது என்னமோ உண்மை தான். ஆனால் காலப்போக்கில் கூந்தலின் வேர்கள் பாதிப்படையும். ஆகவே கூந்தலை அழகாக செயற்கை வழிமுறைகளை தேர்ந்தெடுக்காமல், இயற்கையாக விட்டு விட வேண்டும். அது ஏன் என்று தெரிய வேண்டுமா?

கூந்தலுக்கு செய்யும் மிக முக்கிய தீங்குகளில் ஒன்று தான் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நேராக்குதல். கூந்தலை நிரந்தரமாக நேராக்க விரும்பும் பெண்கள் பார்லர் போய் அமரும் முன் பல ஆயிரம் முறை யோசித்துக் கொள்ளுங்கள். ஒரு முறை கூந்தலை நேராகி விட்டால், அதன் பின்னால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் நிரந்த பாதிப்புகள் சிலவற்றை அது ஏற்படுத்திவிடும்.

சரி வாங்க, கூந்தலை நேராக்கல் செய்வதால், கூந்தலுக்கு ஏற்பட போகும் ஆபத்தை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி உதிர்தல்

முடி உதிர்தல்

கூந்தலை நேராக்கிய பின் அதிகளவிலான முடி உதிர்தலை அனுபவிக்க நேரிடும். இது நிரந்தரமாக முடியை நேராக்குவதால் ஏற்பட போகும் பெரிய பிரச்சனை. அதனால் முடியை நேராக்கல் செய்யக்கூடாத காரணங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

வேர்களுக்கு பாதிப்பு

வேர்களுக்கு பாதிப்பு

கூந்தலின் வேர்கள் பாதிக்கப்பட்டால் புதிதாக வளரும் முடிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். கூந்தலை நேராக்கினால், கூந்தலின் வேர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டுவிடும். ஆகவே முடியின் வேர்களை பாதுகாக்க கண்டிப்பாக நேராக்கல் செய்யக் கூடாது.

கரடு முரடான கூந்தல்

கரடு முரடான கூந்தல்

கூந்தலை நேராக்கினால் காலப்போக்கில்கூந்தல் கரடு முரடாக மாறிவிடும். ஏனெனில் கூந்தலை நேராக்க பயன்படுத்தும் ஜெல், கூந்தலின் அமைப்புத் தரத்திற்கு நல்லதல்ல. மேலும் அந்த ஜெல் நாட்கள் போக போக கூந்தலை சொரசொரப்பாக மாற்றி விடும்.

முடியின் நுனிகள் பிரியத் தொடங்கும்

முடியின் நுனிகள் பிரியத் தொடங்கும்

கூந்தலின் அமைப்புத் தரம் கரடு முரடாக மாறுவதால், முடியின் நுனிகள் பிரியத் தொடங்கும். இது ஒன்றோடு நிற்காமல் ஆயிரக்கணக்கில் பிரியத் தொடங்கும். இது கூந்தலை நேராக்குவதால் ஏற்படும் பாதிப்பு.

வறண்ட தலை சருமம்

வறண்ட தலை சருமம்

கூந்தல் கரடு முரடாக மாறிய மறு நொடியே, தலை சருமம் வறண்டு போகும். இதனால் பொடுகும், பருக்களும் வரத் தொடங்கிவிடும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க கூந்தலை நேராக்குவதை தவிர்க்க வேண்டும்.

கூந்தல் ஜொலிப்பது நின்றுவிடும்

கூந்தல் ஜொலிப்பது நின்றுவிடும்

கூந்தலில் உள்ள ஜொலிப்பு நின்று போனால், பார்ப்பதற்கு வறண்டு களையிழந்து காட்சி அளிக்கும். முடியை நேராக்கினால், கூந்தலின் ஜொலிப்பை அது எடுத்துவிடும். அதனால் கூந்தல் களையிழந்து காட்சி அளிக்கும். ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால் இந்த இயற்கையான ஜொலிப்பு மற்றும் மென்மையை கூந்தல் இழந்து விடுவதால், அதனை தவிர்க்கலாம்.

பிசுறு உண்டாகும்

பிசுறு உண்டாகும்

கூந்தலை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் ஏற்படும் பெரிய பிரச்சனை என்னெவென்றால், அதை செய்து முடித்த பின்பு கூந்தலில் பிசுறு ஏற்படும். அது கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். இதனை தவிர்க்க கூந்தலை நேராக்குவதை தவிர்க்கவும். இதனால் பிற்காலத்தில் ஏற்பட போகும் நூற்றுக்கணக்கான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion