Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கேசத்திற்கு ஏற்ற சிறந்த ஹேர்ஆயில்கள்!

தேங்காய் எண்ணெய்
நூற்றாண்டு காலமாகவே இந்தியாவில் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு உள்ளது. கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதன் மூலம் கூந்தல் ஆரோக்கியமான வளர்ச்சியடையும். சுத்தமான தேங்காய் எண்ணெய் கூந்தலானது வறண்டுபோகாமல் தடுக்கிறது. பொடுகு தொல்லையை நீக்குகிறது. வெப்பத்தினால் கூந்தல் பாதிக்கப்படும் போது தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி அதை தலையில் மசாஜ் செய்தால் தலைக்கும், கூந்தலுக்கும் அது சிறந்த சிகிக்சையாக செயல்படுகிறது.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் உயர்தர கொழுப்பு உள்ளது. இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. வாரம் ஒருமுறை ஆலிவ் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் உடைந்து உதிர்வது தடுக்கப்படுகிறது.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் இ அடங்கியுள்ளது. இது கூந்தல் அடர்த்தியாக வளர உதவி செய்கிறது. மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து தலைக்கு பாதம் எண்ணெய் உபயோகித்தால் கூந்தலின் வளர்ச்சி 4 இஞ்ச் அளவிற்கு அதிகமாக வளரும் என்று கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் குளிர்ச்சியானது. கண்களைச் சுற்றியும், புருவங்கள் வளரவும் விளக்கெண்ணெய் உபயோகிப்பது உண்டு. இது கூந்தல் வளர்ச்சியில் உதவி புரிவதோடு தலைக்கும் சிறந்த ஆரோக்கியத்தை தருகிறது. விளக்கெண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்வதன் மூலம் தலையில் ரத்த ஓட்டம் அதிகமாகும் கூந்தலும் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஜோஜோபா எண்ணெய்
ஜோஜோபா விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெய் சருமத்திற்கும், கூந்தலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. இது பிசுபிசுப்பு தன்மையற்றது. இது கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுவதோடு வறட்சியடையாமல் பாதுகாக்கிறது.



Click it and Unblock the Notifications











