Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
கூந்தலை வீட்டிலேயே அடிக்கடி ரிலாக்ஸ் பண்ணுங்க!!!

ஆமணக்கெண்ணெய் மசாஜ் : ரிலாக்ஸ் என்று சொன்னலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, மசாஜ் தான். இவ்வாறு மசாஜ் செய்தால் கூந்தல் வேர்கள் எந்த பாதிப்பும் அடையாமல், ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இந்த மசாஜிற்கு ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தி ஸ்கால்ப் மற்றும் முடியின் நீளம் முழுவதும் தடவ வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இருக்கும் தசைகள் நன்கு ரிலாக்ஸ் ஆவதோடு, முடியின் அடர்த்தியும் கூடும். அதிலும் இந்த மசாஜை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக நன்கு பளபளப்போடு வளர்வதோடு, நேராகவும் வளரும்.
தேங்காய் பால் & எலுமிச்சை சாறு : முதலில் தேங்காய் பால் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஸ்கால்ப்பிற்கு மற்றும் கூந்தலுக்குத் தடவி, ஈரத்துணியால் கட்டி ஒரு மணிநேரம் கழித்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து மாதத்திற்கு மூன்று நாட்கள் செய்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, நீளமாக வளரும்.
பால் : விரைவில் ஒரு நல்ல ரிலாக்ஸ் கூந்தலுக்கு வேண்டுமென்றால், அதற்கு பால் மற்றும் தண்ணீரை சம அளவில் எடுத்துக் கொண்டு, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கூந்தலில் தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்கும் போது, அந்த கலவையானது ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். பின்னர் ஒரு சீப்பால் கூந்தலை சிறிது நேரம் சீவி, காய வைக்க வேண்டும். பிறகு ஷாம்புவால் கூந்தலை அலசிவிடவும். இதனால் கூந்தல் நேராக இருப்பதோடு, அழகாக மின்னும்.
ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை : இந்த முறையை செய்வது மிகவும் கடினம். ஆனால் மிகவும் பயனுள்ளது. அதனை செய்தால் கூந்தல் நேராக வளருவதோடு, ஒரு நல்ல ரிலாக்ஸ் போன்றும் இருக்கும். அதற்கு மூன்று முட்டையை உடைத்து ஆலிவ் ஆயிலில் ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ளவும். பின் இந்த மாஸ்க்கை தலைக்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் நன்கு கழுவிட வேண்டும். முட்டை பயன்படுத்துவதால், அந்த வாசனை கூந்தலில் இருந்து போகும் வரை நன்கு அலச வேண்டும்.
இவ்வாறெல்லாம் செய்து கூந்தலை சரியாகவும் முறையாகவும் பராமரித்து வந்தால், நேராக வளர்வதோடு, கூந்தலும் ரிலாக்ஸாக இருக்கும்.



Click it and Unblock the Notifications