Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
அழகான பின்னலில் தேவதையாய் அசத்தலாம் !

பிரஞ்ச் பிளாட்
முதலில் கண் புருவ பகுதியில் இருந்து முடியை எடுத்து அதை நார்மல்பிளாட் ஆரம்பிக்கும்படி தொடங்கவும். அடுக்காக எடுத்து முன் பகுதியை சரி செய்யவும். அதே போல இரண்டு பக்கமும் செய்யவும். இதை காது வரை போடவும் பிறகு மீதியுள்ள முடியில் நார்மல்பிளாட் போடவும். பிறகு பீட்ஸ் வைத்து அலங்கரிக்கவும்.
ஐந்துகால் பின்னல்
முதலில் பிரன்ச் பிளாட் போட்டு கொண்டு அதன் பிறகு மீதியுள்ள முடியை ஐந்து பகுதியாக பிரித்து முதல் மூன்று கால்களில் சாதாரணமாக போடவும். பிறகு இரண்டு பகுதியை எடுத்து இணைக்கவும். அதன் பின்னர் பூக்கள் வைத்து பீட் வைத்து அலங்கரிக்கவும்
மல்லிகை மற்றும் கோழிகொண்டை ஜடை
முகத்திற்கு தக்கபடி வகிடு எடுக்கவும். பிறகு தேவையான நீளத்திற்கு பின்னல் போட்டு தேவையான நிறத்தில் குஞ்சலம் வைத்து கொள்ளவும். அதன் பின்னர் மல்லிகை மற்றும் கோழி கொண்டை பூவை வைத்து அடுக்கு அடுக்காக அலங்கரிக்கவும்.
முகூர்த்த ஜடை
தேவையானபடி வகிடு எடுத்து உச்சிபில்லை வைத்து பின்னல் போட்டு தங்க நிறம் குஞ்சலம் அல்லது குண்டு குஞ்சலம் வைக்கவும். பின்னர் ஜடை அலங்காரத்தை கூந்தலில் வைத்து கட்டி விடவும் பின்னர் பெங்களூர் ரோஸ் வைத்து நடு நடுவே அலங்கரிக்கவும். இது மணப்பெண்களுக்கு ஏற்ற அலங்கார ஜடையாகும்.
ரிசப்சன் ஜடை
முகூர்த்த நேரத்தில் ஒரு அலங்காரமும், ரிசப்சன் நேரத்தில் ஒரு அலங்காரமும் செய்வது வழக்கம். ரிசப்சனுக்கு
முதலில் தலையின் முன்பகுதியில் "பப்" வைக்கவும். பிறகு ஓவர் டேப் சுருள் போடவும். அதன் பின்னர் மீதியுள்ள முடியை சவுரி வைத்து பின்னல் இட்டு குஞ்சலம் வைக்கவும். அதன் பின்னர் நகை இணைப்பை உச்சியில் வைக்கவும். அதன் பிறகு கோழி கொண்டை மற்றும் மல்லிகை வைத்து அலங்கரிக்கவும்.
நகை கொண்டை ஜடை
கூந்தலின் நடுப்பகுதியில் பப் வைக்கவும். பிறகு போனிடைல் போடவும். கூந்தலை இரண்டு பகுதியாக பிரிக்கவும். முதல் பகுதியில் சுருள் போடவும் மீதியுள்ள பகுதியில் பின்னல் போட்டு குஞ்சலம் வைக்கவும். விருப்பத்திற்கு ஏற்ப கோழி கொண்டை, மல்லிகைப்பூ, நகை வைத்து அலங்கரிக்கவும்.
சிம்பிள் முகூர்த்த ஜடை
முதலில் வகிடு எடுத்து பில்லை இணைக்கவும். பின்னர் சவுரி வைத்து குஞ்சலம் வைத்து அதன் பின்னர் மல்லிகைப் பூவை பில்லையில் சுற்றி அதன் ஜடை மேல் சுற்றி விடவும். பிறகு ஜடை நடுவில் பென்டன்டை வைத்து அலங்கரிக்கவும்.
முந்திரி மற்றும் செரி ஜடை
முதலில் முன் பகுதியில் பில்லை வைத்து அதன் பிறகு சவுரி வைத்து குஞ்சலம் வைத்து பின்ன வேண்டும். பிறகு முந்திரி, செரி பழம் வைத்து அலங்கரிக்கவும். அதன் பிறகு திராட்சை, மல்லிகை, கனகாம்பரம் வைத்து அலங்கரிக்கவும்.
மயில் ஜடை
முதலில் முன் பகுதியை சரி செய்யவும். பிறகு முடி எடுத்து போனி டைல்ஸ் போடவும். பிறகு சுற்றிலும் சுருள் மற்றும் நடுவில் ஒரு சுருள் போடவும் பிறகு மீதமுள்ள முடியில் சவுரி வைத்து பின்னல் போட்டு குஞ்சலம் வைத்து பின்னவும். பிறகு மயில் வடிவத்தை அதில் இணைக்க வேண்டும்.
கதம்ப ஜடை
நேர் வகிடு எடுத்து முன் பகுதியை சரி செய்து உச்சியில் முடி எடுத்து பில்லை செட் செய்யவும் பில்லை சுற்றி பல வண்ண மலர் சுற்றி வைத்து கதம்ப இணைப்பை வைக்கவும். இதுபோன்ற ஸ்டைல்களில் கூந்தல் அலங்காரம் செய்து போனால் அங்கு அனைவரின் கவனமும் உங்கள் மீது திரும்பும் என்பதில் சந்தேகமில்லை.



Click it and Unblock the Notifications