இரவில் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா? இனிமே தெரியாம கூட இத பண்ணாதீங்க...!

Hair Care Tips: இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அனைவராலும் காலையில் நேரமே எழுந்திருக்க முடியாது. இதனால் காலையில் தலைக்கு குளிப்பது என்பது மிகவும் சவலான காரியமாக மாறுகிறது. எனவே பெரும்பாலானவர்கள் தலைக்கு குளிப்பதை காலையில் தவிர்க்கிறார்கள். அதுமட்டுமின்றி அலுவலகம் முடிந்து திரும்பி வந்த பிறகு தலைக்கு குளிப்பதை புத்துணர்ச்சி அளிப்பதாக நினைக்கிறார்கள்.

அதனால் பெரும்பாலானோர் தூங்கும் முன் தலைக்குக் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது அவர்களின் தலைமுடிக்கு அவர்களே ஏற்படுத்தும் ஆபத்தாகும். நேரத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்து மக்கள் செய்யும் இந்த தவறால் அவர்கள் தங்கள் தலைமுடியை சேதப்படுத்துகிறார்கள் மற்றும் முடி உதிர்வை ஊக்குவிக்கிறார்கள். நிபுணர்கள் இரவில் தலைமுடியைக் கழுவுவதை ஏன் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்களென இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Hair Care Tips Why You Should Never Wash Your Hair At Night in Tamil

பாதுகாப்பு தடையை பலவீனப்படுத்துகிறது

இரவில் உங்கள் தலைமுடியைக் கழுவுவதால் நீங்கள் ஈரமான கூந்தலுடன் படுக்கைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளுகிறது, இது முடியை எளிதில் உடையக்கூடியதாக மாற்றுகிறது. நீரின் செயல்பாட்டின் காரணமாக, நம் முடியின் தண்டைப் பாதுகாக்கும் நமது வேர்களின் கெரட்டின் செதில்கள் தளர்ந்து பாதுகாப்புத் தடையை வலுவிழக்கச் செய்து, நமது தலைமுடியை நுண்துளைகளாக மாற்றுகிறது மற்றும் முடிக்கு ஏற்படும் சேதங்களை அதிகரிக்கிறது.

பொடுகு பிரச்சினையை அதிகரிக்கிறது

ஈரமான முடியுடன் படுக்கைக்கு எடுத்துச் செல்வது உச்சந்தலையில் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது, இது எரிச்சல், சிவத்தல் மற்றும் உலர் உச்சந்தலையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும், மேலும் இரவில் வெள்ளை செதில்கள் மற்றும் பொடுகு வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

முடி உதிர்வை அதிகரிக்கிறது

பொதுவாகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின் அதிக முடி உதிர்வை நாம் எதிர்கொள்கிறோம். இந்த நிலையில் இரவில் தலைக்குக் குளிக்கும் போது ஈரமான கூந்தலுடன் படுக்கைக்குச் செல்வதால், முடி நார்ச்சத்து இழப்பு மற்றும் தலையணையில் தேய்த்தல் பிரச்சனையானது, காலையில் முடி உதிர்வதை ஊக்குவிக்கும், மேலும் சிக்கு மற்றும் முடி உடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

வழுவழுப்பான கூந்தலால் முடியின் தரம் குறைகிறது

தூங்குவதற்கு முன் குளித்தால் காலையில் சுத்தமான மற்றும் பிரகாசமான கூந்தலை நீங்கள் பெறுவீர்கள் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். அதிக ஈரப்பதம் மற்றும் ஈரமான இழைகள் காரணமாக உங்கள் தலைமுடி இரவிலேயே வழுவழுப்பானதாக மாறிவிடும், அடுத்த நாள் காலையில் உங்கள் தலைமுடி பிசுபிசுவென்று இருக்கும்.

பிற ஆபத்துகள்

இரவில் தலைக்குக் குளிப்பது தற்காலிக புத்துணர்ச்சியை அளிக்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். இது உங்கள் முடி இழைகள் மற்றும் உச்சந்தலையில் சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஈஸ்ட் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற உடனடி நோய்க்கு வழிவகுக்கும். இந்த ஈரப்பதம் பூஞ்சைகள் மற்றும் சிறிய பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தும். இந்த ஆபத்துகளைத் தவிர்க்க உங்கள் தலைமுடியை உலர்த்திய பின் படுக்கைக்குச் செல்லவும்.

Story first published: Tuesday, November 12, 2024, 22:18 [IST]
Desktop Bottom Promotion