Latest Updates
-
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
தலைமுடி கருகருன்னு அடர்த்தியா வளரணுமா? அப்ப இந்த ஹேர் ஆயிலை வீட்ல தயாரிச்சு யூஸ் பண்ணுங்க...
Hair Care Tips In Tamil: தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல், ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவற்றால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ஒருவரது தலைமுடி நன்கு வலிமையாக ஆரோக்கியமாக இருக்கிறது என்றால், உடலுக்கு போதுமான வைட்டமின்களும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன என்று அர்த்தம்.
ஆனால் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது, நிறைய பேர் தலைமுடி உதிர்வதை சந்திப்பார்கள். உங்களுக்கும் அப்படி தலைமுடி உதிருமா? அப்படி தலைமுடி உதிர்வதைப் பார்க்கும் போது, எங்கு அடர்த்தி குறைந்து எலிவால் போன்று மாறிவிடுமோ அல்லது வழுக்கை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உங்கள் மனதில் எழுகிறதா? அப்படியானால் இனிமேல் அந்த கவலை கொள்ள வேண்டாம்.

ஏனெனில் எப்பேற்பட்ட காலநிலையிலும் தலைமுடி உதிராமல் வலிமையாகவும் அடர்த்தியாகவும் இருக்க ஒரு அற்புதமான நேச்சுரல் எண்ணெயை வீட்டில் தயாரித்துப் பயன்படுத்துங்கள். இந்த எண்ணெயானது தலைமுடியை அடர்த்தியாக வளரத் தூண்டுவதோடு, நன்கு கருகருவென்று வளரச் செய்யும். இப்போது அந்த நேச்சுரல் ஹேர் ஆயிலை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.
கடுகு எண்ணெய்
இந்த நேச்சுரல் ஹேர் ஆயிலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது கடுகு எண்ணெய் தான். ஏனெனில் கடுகு எண்ணெயில் தலைமுடியை வலிமையாக வைத்துக் கொள்ள தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகளவில் உள்ளன. எனவே இந்த எண்ணெயை பயன்படுத்தும் போது, தலைமுடி உதிர்வது தடுக்கப்படும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.
நேச்சுரல் ஹேர் ஆயிலுக்கு தேவையான பொருட்கள்:
* வெற்றிலை - 1
* கருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
* வெந்தயம் - 1 ஸ்பூன்
* கடுகு எண்ணெய் - தேவையான அளவு
தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு பேனில் கடுகு எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் ஒரு வெற்றிலையை கையால் பிய்த்து போட வேண்டும்.
* பின்பு அதில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து 5 நிமிடங்கள் சூடேற்றி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பிறகு எண்ணெயை குளிர வைக்க வேண்டும்.
* எண்ணெய் குளிர்ந்ததும், அந்த எண்ணெயை வடிகட்டி, அதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
* தயாரித்த எண்ணெயை பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி ஸ்கால்ப்பில் தடவ வேண்டும்.
* பின் கைவிரலால் ஸ்கால்ப்பை குறைந்தது 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியால் தலையை சுற்றி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இதனால் அந்த எண்ணெயில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு, தலைமுடியின் வேர்கள் வலிமையாகும்.
* பின் மைல்டு ஷாம்பு யன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் போது, மயிர்கால்கள் வலிமையாகி, முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, தலைமுடியும் நன்கு கருகருவென்று இருக்கும்.



Click it and Unblock the Notifications











