Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?
நல்ல வாசனை என்பது சரியான டியோடரண்ட் அல்லது வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது அல்ல. ஆடையின் அமைப்பு ஒருவரின் வாசனையின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நாம் அனைவரும் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்க ஆசைப்படுகிறோம். நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க நம் மீதிருந்து வெளிவரும் வாசனையும் ஒரு காரணம். அந்த வாசனை நம்மை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. வெளியே செல்வதற்கு முன், வாசனை திரவியத்தை நம் மீது பூசிக்கொள்ளவது நமது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும், பருவமழையின் போது ஈரப்பதம் நம் மீது துர்நாற்றம் போன்ற வாசனையை வெளிப்படுத்துகிறது. இது சமாளிக்க கடினமாக இருக்கும்.

இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இந்த பருவமழையில் தெய்வீக வாசனையை உறுதிப்படுத்த உதவும் சில எளிய குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

சரியான வாசனை திரவிய வகையைத் தேர்வு செய்யவும்
உங்கள் உடலுக்கு ஏற்ற சரியான நறுமணத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம் மற்றும் அது தோன்றும் அளவுக்கு எளிதானது அல்ல. இதற்கு முயற்சி செய்ய வேண்டும் மற்றும் சிறந்த தீர்ப்பு உணர்வு தேவைப்படும். சந்தையில் ஏராளமான வாசனை திரவியங்கள் உங்களுக்கு கிடைக்கின்றன. எனவே தேர்வு செய்யும் போது, அது உங்கள் உடலின் இயற்கையான வாசனையுடன் நன்றாகப் பொருந்துகிறதா மற்றும் உங்கள் மூக்கிற்கு இனிமையாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மழைக்காலத்தில், நீண்ட காலம் நீடிக்கும் வாசனை திரவியத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.

வாசனையின் பயன்பாடு
நீங்கள் பயன்படுத்தும் நறுமண பொருட்கள் மற்றும் உங்கள் உடல் விஷயத்தில் அதை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாசனை திரவியம், கொலோன் அல்லது வாசனை எண்ணெய் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் அதை வைக்க வேண்டிய இடத்தில் வைக்காவிட்டால் முழு பலனையும் பெற முடியாது. நாடிப் புள்ளிகளில் வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதால், அவை உங்கள் உடல் வேதியியலுக்கு ஏற்ப அவற்றின் வாசனையை தானாகவே சரிசெய்யும். எனவே, உங்கள் உடல் வெப்பமடையும் போது இயற்கையாகவே இனிமையான நறுமணம் வெளிப்படும். உங்கள் மணிக்கட்டுகள், அக்குள் பகுதி, உங்கள் முழங்கால்களுக்குப் பின்னால் உள்ள பகுதி மற்றும் உங்கள் காதுகளின் பின்புறம் ஆகியவை டியோடரண்டைப் பயன்படுத்துவதற்கான சிறந்த இடங்கள்.

சோப்பு வாசனை மீது கவனம் செலுத்துங்கள்
பெரும்பாலான மக்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் துணி துவைக்கும் சோப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. ஆனால் உங்கள் துணிகளை துவைக்க நீங்கள் பயன்படுத்தும் சோப்பு உங்கள் வாசனையை தீர்மானிக்கிறது. பெரும்பாலான சவர்க்காரம் மற்றும் சலவை சோப்புகள் நறுமணத்தில் கனமானவை. ஈரமான காலநிலையில் கூட உங்களுக்கு நல்ல வாசனையை கொடுக்கும். ஆதலால், துணி துவைக்கும் சோப்பு மற்றும் பவுடர் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஆடை அணிவது
நல்ல வாசனை என்பது சரியான டியோடரண்ட் அல்லது வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது அல்ல. ஆடையின் அமைப்பு ஒருவரின் வாசனையின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் வெளியே செல்லத் தேர்ந்தெடுக்கும் ஆடை நாள் முழுவதும் உங்கள் வாசனையை தீர்மானிக்கிறது. மழைக்காலங்களில், பாலியஸ்டர், அடர்த்தியான மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்த்து, வெளிர் துணிகள் மற்றும் வெளிர் வண்ணங்களால் ஆன ஆடைகளை அணிவது வியர்வையைக் குறைக்க உதவும். உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் ஆடைகளை எப்போதும் அணிந்து செல்லுங்கள்.

சரியான ஷவர் ஜெல்லை பயன்படுத்தவும்
குளிப்பது குறைவான ஒட்டும் தன்மையுடனும், நல்ல வாசனையாகவும் இருக்கும் என்று பலர் கூறினாலும், நீடித்த நறுமணத்துடன் கூடிய ஷவர் ஜெல்லைப் பயன்படுத்துவது அதிசயங்களைச் செய்யும். ஈரப்பதம் உங்களுக்கு வருவதை நீங்கள் உணரும்போது, நீங்கள் செய்ய வேண்டியது நறுமணத்தை செயல்படுத்த உங்கள் தோலின் மீது தேய்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications