கோடையில் ஏன் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்த சொல்றாங்க தெரியுமா...?

By Maha

தற்போது வெயில் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. வெயிலின் தாக்கத்தினால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை சூரியக்கதிர்கள் உறிஞ்சி எடுத்துவிடும். இதனால் தான் கோடையில் சருமத்தில் பல பிரச்சனைகள் வருகிறது. ஆனால் அந்த பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே ஒரு பொருளைக் கொண்டு தீர்வு காண நினைத்தால், அதற்கு வீட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் தான் சிறந்த ஒன்று.

பலரும் தேங்காய் எண்ணெய் வேஸ்ட் என்று நினைத்து, அதனை அதிகம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். ஆனால் அதில் நிறைந்துள்ள சத்துக்களால் முடி பிரச்சனைகள் மட்டுமின்றி, சரும பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் இதனை வெறும் தலைக்கு மட்டும் பயன்படுத்தாமல், சருமத்திற்கும் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

இங்கு கோடையில் ஏற்படும் சரும பிரச்சனைகளைப் போக்க தேங்காய் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தல் உதிர்தலைத் தடுக்கும்

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும்

தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி பயன்படுத்தி வந்தால், அது மயிர்கால்களை வலிமையாக்கி, கோடையில் முடி உதிர்வதைத் தடுக்கும்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

கோடையில் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை சூரியக்கதிர்கள் உறிஞ்சிவிடுவதால், சிலருக்கு சரும வறட்சி ஏற்படும். அதனைத் தடுக்க தினமும் குளித்து முடித்த பின், சருமத்திற்கு தேங்காய் எண்ணெயை தேய்க்க வேண்டும்.

சிறந்த ஐ க்ரீம்

சிறந்த ஐ க்ரீம்

கோடையில் கண்களுக்கு அடியில் வறட்சி ஏற்பட்டு, கருமையாகும். இதனைத் தடுக்க தினமும் இரவில் படுக்கும் முன், கண்களுக்கு அடியில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து தூங்கினால், இந்த பிரச்சனையைத் தடுக்கலாம்.

இறந்த செல்களை நீங்கும்

இறந்த செல்களை நீங்கும்

3 டேபிள் ஸ்பூன் சர்க்கரையில், தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவாகும்.

பளிச் பற்கள்

பளிச் பற்கள்

தினமும் பற்களை துலக்கும் போது, பேஸ்ட்டுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து துலக்கினால், பற்கள் வெள்ளையாகும்.

சிறந்த மேக்கப் ரிமூவர்

சிறந்த மேக்கப் ரிமூவர்

கடைகளில் எத்தனையோ மேக்கப் ரிமூவர் இருந்தாலும், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மேக்கப்பை ரிமூவ் செய்யலாம். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

சிறந்த ஷேவிங் ஆயில்

சிறந்த ஷேவிங் ஆயில்

கோடை காலத்தில் ஷேவிங் செய்யும் போது, ஷேவிங் செய்த பின்னர் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், வறட்சியைத் தடுத்து, அரிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

குதிகால் வெடிப்பு

குதிகால் வெடிப்பு

குதிகால் வெடிப்பு இருந்தால், தினமும் தேங்காய் எண்ணெயை குதிகாலில் தடவி மசாஜ் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு நீங்கி, குதிகால் மென்மையாகும்.

மென்மையான சருமம்

மென்மையான சருமம்

தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், உடல் முழுவதும் மாய்ஸ்சுரைசர் தேய்த்தது போன்று வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.

கருமையைப் போக்க...

கருமையைப் போக்க...

வெயிலில் சென்று வீட்டிற்கு வந்ததும், தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி சருமம் கருமையாகும். ஆனால் தேங்காய் எண்ணெயோடு சிறிது தக்காளி ஜூஸ் சேர்த்து கொண்டு, சருமத்தில் தடவினால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கலாம்.

உதடுகளுக்கு நல்லது

உதடுகளுக்கு நல்லது

கோடையில் சிலருக்கு உதடு வெடிப்பு ஏற்படும். அத்தகையவர்கள் லிப் பாம் பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால், உதடு வறட்சி நீங்குவதோடு, உதடுகளும் மென்மையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, March 24, 2015, 18:08 [IST]
Desktop Bottom Promotion