Latest Updates
-
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
45 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள உலகின் பணக்கார அரசர் இவர்தான்... இவரோட வாரிசு யார் தெரியுமா?
இந்திய மதிப்பில் 59 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் தற்போது உலகின் மிகப்பெரிய பணக்காரராக முதலிடத்தில் உள்ளார். உலக வரலாற்றில் பல கோடீஸ்வரர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும், தங்கள் சொந்த நிறுவனத்தை தொடங்கியதன் மூலமும் அளவிலா செல்வத்தை குவித்துள்ளனர். தற்போது உலக பணக்காரராக இருக்கும் பலரும் சர்வதேச வர்த்தகத்தின் மூலமே அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஆனால் தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்கோர்னைப் போல, அரச வம்சாவளி, ஒரு நாட்டின் மீதான அதிகாரம் மற்றும் தலைமைத்துவம், அத்துடன் மற்ற கோடீஸ்வரர்களுடன் ஒப்பிடும்போது கற்பனை செய்ய முடியாத அளவு பெரும் செல்வம் போன்ற அசாதாரணமான கலவையைக் கொண்டவர்கள் மிகச் சிலரே உலகில் உள்ளனர்.

17,000 சொத்துக்களை கொண்ட அரசர் யார்?
அளவற்ற செல்வம் மற்றும் கணக்கற்ற சொத்துக்களின் காரணமாக, தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் உலகிலேயே மிகவும் பணக்கார அரசராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மன்னர் மகா வஜிரலோங்கோர்க்கு சுமார் 50 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் மொத்த சொத்து மதிப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மன்னர் ராமா X-இன் பெரும்பாலான சொத்துக்களை அரசாங்கத்தின் சொத்து வாரியம் நிர்வகிக்கிறது, இது 2018-ஆம் ஆண்டு மன்னர் ராமா X-இன் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மன்னர் ராமா X-இன் பெரும்பாலான சொத்துக்கள் இப்போது தாய்லாந்திற்குள்ளேயே அமைந்துள்ளன, மேலும் அவற்றின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வாடகையாகவே வருகிறது.
எவ்வளவு சொத்துக்கள் உள்ளது?
தாய்லாந்து மன்னரின் முக்கிய வருமானம் தாய்லாந்தில் உள்ள அவரது பிரம்மாண்டமான சொத்துக்கள் மற்றும் நிலங்களுக்கு வழங்கப்படும் வாடகையிலிருந்து வருகிறது. அவரது சொத்துக்களின் மதிப்பீடுகளின்படி, மன்னர் நாடு முழுவதும் தோராயமாக 16,210 ஏக்கர் நிலத்தை வைத்துள்ளார். மேலும், அவர் நாடு முழுவதும் 40,000-க்கும் மேற்பட்ட சொத்துக்களை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஹோட்டல்கள், வணிகக் கட்டிடங்கள், அரண்மனைகள் மற்றும் உல்லாச விடுதிகள் உட்பட 17,000-க்கும் மேற்பட்ட சொத்துக்கள் பாங்காக்கில் அமைந்துள்ளன.
பிரைவேட் ஜெட்கள்
தாய்லாந்து மன்னரிடம் ஆயிரக்கணக்கான சொத்துக்கள் உள்ளது, மேலும் இவை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போதைய மதிப்பீடுகளின் படி, அவர் ஒவ்வொரு இரவும் தனது இருப்பிடத்தை மாற்றினால், அவர் முன்பு பயன்படுத்திய ஒரு இருப்பிடத்திற்குத் திரும்புவதற்கு 47 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவரிடம் ஹெலிகாப்டர்கள் உட்பட முப்பத்தெட்டுக்கும் மேற்பட்ட ஜெட் விமானங்கள் மற்றும் பிற வானூர்திகளும் இருப்பதாகத் கணக்கிடப்பட்டுள்ளது.
கார் கலெக்ஷன்
மன்னரின் அரண்மனைகளில் ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற முந்நூறுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பத்தாம் ராமா மன்னரின் செல்வத்தில், 52 தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலும் உள்ளது.
யார் இந்த வஜிரலோங்கோர்ன்?
1952-ல் பிறந்த வஜிரலோங்கோர்ன், மன்னர் பூமிபோல் மற்றும் ராணி சிரிகித் ஆகியோரின் ஒரே மகன் ஆவார். அவர் சிறு வயதிலேயே பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார். தாய்லாந்திற்கு வெளியே உள்ள உயர்மட்ட இராணுவக் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றார். முதலில் இங்கிலாந்திலும், பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலும் படித்தார். கேன்பராவில் உள்ள மதிப்புமிக்க ராயல் மிலிட்டரி கல்லூரியில் இராணுவப் படிப்பில் பட்டம் பெற்ற அவர், பின்னர் தாய்லாந்து அரச இராணுவத்தில் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்கு மனைவிகள்
தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன் நான்கு திருமணங்களை செய்து கொண்டார் மற்றும் அவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். அவரது முதல் திருமணம் இளவரசி சோம்சவலியுடன் நடைபெற்றது. அவர்களுக்கு இளவரசி பஜராகித்தியபா என்ற மகள் பிறந்தார். அவர் தனது இரண்டாவது மனைவியாக நடிகை யுவதிதாவை மணந்தார், அவர்களுக்கு ஐந்து குழந்தை பிறந்தது. பின்னர் அவர் ஸ்ரீரஸ்மி என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார், அவர் மூலம் இளவரசர் டிபாங்கோர்ன் என்ற மகனைப் பெற்றெடுத்தார். அவரது முடிசூட்டு விழா அதிகாரப்பூர்வமாக செய்யப்படுவதற்கு முன்பு அவர் ராணி சுதிதாவை திருமணம் செய்து கொண்டார். தாய்லாந்து அரியணையின் அதிகாரப்பூர்வ வாரிசு மூன்றாவது மனைவிக்குப் பிறந்த மகனான இளவரசர் இளவரசர் டிபாங்கோர்ன் ஆவார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
