அமாவாசையில் நிகழும் சூரிய கிரகணம்.. இந்த ராசியினருக்கு யோகம்தான்..! இதில் உங்க ராசி இருக்கா?

பொதுவாக கிரகணங்களால் ராசிகள் பாதிக்கப்படும்.. சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும்.. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் பித்ரு பக்ஷ அமாவாசை நாளில் நிகழ உள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படக்கூடும்.

அந்த வகையில் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 2ஆம் தேதி மகாளய பட்ச அமாவாசை அன்று நிகழ்கிறது. இதனால் குறிப்பிட்ட இந்த 3 ராசிகளுக்கு எல்லாமே அதிர்ஷ்டமாக இருக்கும்.. அத்துடன் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். நினைத்தது அனைத்தும் நடக்கும்.. திடீர் பண வரவு இருக்கும். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டு. வணிகர்கள் பல சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

solar eclipse 2024 these rasi people will get more benefits financially Sarva Pitru Amavasya

சூரிய கிரகணம் எப்போது?

இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 2, 2024 அன்று நிகழ்கிறது. சூரிய கிரகணம் இரவு 9:14 மணிக்கு தொடங்கி, அதிகாலை 3:17 மணிக்கு முடிவடைகிறது. இந்த சூரிய கிரகணம் புரட்டாசி மாத அமாவாசை திதியில் நிகழ்கிறது. இந்த நாள் மகாளய பட்ச அமாவாசை திதியாக இருக்கும். இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. தென் அமெரிக்கா, ஆர்க்டிக், அர்ஜென்டினா, பிரேசில், பெரு, பிஜி. சிலி, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் இந்த கிரகணத்தை காணலாம்.

சூரிய கிரகணத்தால் சுப பலன்கள் பெற போகும் ராசிகள்

ரிஷபம்

புதிய வருமான ஆதாரங்கள் உங்களுக்கு கிடைக்கும்.. அது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தலாம். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு பலனளிக்கும், உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். அனைத்து வகையிலும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.. குடும்பத்திலும் பாராட்டப்படுவீர்கள்.. மாகாளய அமாவாசையில் யாருகாவது உணவு தானம் தாருங்கள் நல்லது..

விருச்சிகம்

உங்கள் நம்பிக்கையும் ஆற்றலும் அதிகரிக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய முடிவுகளை அடைவீர்கள், மேலும் படைப்பாற்றல் உங்கள் பணி அணுகுமுறையில் பிரதிபலிக்கும். நல்ல நேரம் உங்களுக்கு ஆரம்பமாகிவிட்டது என்றே கூறலாம். மாகாளய அமாவாசையில் பசுவிற்கு பச்சைக் கீரையைக் கொடுங்கள். பித்ரு சாபம் நீங்கி இன்னும் அதிகமான பலன்களை பெறுவீர்கள்..

தனுசு

ராசி உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வராமல் இருந்த பணம் வீடு தேடி வந்து சேரும்.. கணவன் மனைவி உறவு பலப்படும்.. நினைட்த காரியங்கள் வெற்றி பெறும்.. உங்களால் முடிந்த உதவியை ஒரு ந்ந்ழை பெண்ணுக்கு செய்யுங்கள்..

மேலும் இந்த நாளில் சூரியன், புதன், ராகு, கேது ஆகியோர் அசுப நிலையில் இருப்பதால் சிலருக்கு வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முடிந்தவரை அனைவருமே அன்ரைய தினம் யாருகாவது அன்னதானம் செய்வது நல்லது.. அது உங்களுக்கு வரவுள்ள கஷ்டத்தை போக்கும் என்கிறது ஜோடிட சாஸ்திரங்கள்..

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion