Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
13 வருடம் கழித்து சனிக்கிழமையில் வரும் சனி ஜெயந்தி: இந்த 3 ராசிக்காரங்க உச்சத்தை தொடப்போறாங்க..
Shani Jayanti 2026: நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடிய நீதிமான் தான் சனி பகவான். இந்த சனி பகவான் சூரிய பகவானின் மகன் ஆவார். இந்த சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் தான் பிறந்தார். சனி பகவான் பிறந்த தினம் தான் ஒவ்வொரு ஆண்டும் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி மே 16 ஆம் தேதி வருகிறது. அதுவும் இந்த சனி ஜெயந்தியானது சனி பகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானது.

அதுவும் இந்த சனி ஜெயந்தி சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் சனிக்கிழமையன்று வருகிறது. இதனால் இந்த ஆண்டின் சனி ஜெயந்தியின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி இந்த நாளில் பல மங்களகரமான சுப யோகங்களும், ராஜயோகங்களும் உருவாகியிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பரிபூர்ண ஆசியை வழங்கவுள்ளார். இப்போது 13 வருடம் கழித்து சனிக்கிழமையில் வரும் சனி ஜெயந்தியால் உச்சத்தை தொடப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியானது மிகவும் அற்புதமானதாக இருக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நீண்ட கால மன அழுத்தம் குறையும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் முடிவெடுக்கும் திறன்களும் வலுபெறும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் சனி பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். இதன் விளைவாக புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். வீட்டு சூழல் முன்பை விட சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை வலுவடையும். மொத்தத்தில் சனி பகவானின் ஆசியால், வாழ்வில் உச்சத்தை அடைவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியானது புதிய தொடக்கங்களையும், முன்னேற்றத்தையும் குறிக்கிறது. சனி பகவானின் அருளால் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் இக்காலத்தில் தங்களின் புதிய திட்டங்களைத் தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம். மேலும் இக்காலத்தில் வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதோடு எதிர்காலத்தில் நல்ல நன்மைகளைத் தரும் புதிய நட்புகள் கிடைக்கும். நிதி ரீதியாக நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


