Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
297 ஆண்டுகளுக்கு பின் ரக்ஷா பந்தன் நாளில் நிகழும் அரிய நிகழ்வு: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Raksha Bandhan 2025: பொதுவாக பண்டிகை நாட்களில் கிரகங்கள் நிலைகளால் சில சமயங்களில் அரிய நிகழ்வுகள் ஏற்படலாம். அவ்வாறு உருவாகும் நிகழ்வுகள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 09 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் ராக்கி என்னும் மஞ்சள் நிற கயிற்றை கட்டுவார்கள். இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை வட இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த ஆண்டின் ரக்ஷா பந்தன் நாளில் சுமார் 297 ஆண்டுகளுக்கு பின் ஒரு அரிய கிரக நிகழ்வுகள் உருவாகவுள்ளன.

அதாவது இந்த நாளில் சூரியன் கடக ராசியிலும், சந்திரன் மகர ராசியிலும், செவ்வாய் கன்னி ராசியிலும், புதன் கடக ராசியிலும், குரு மற்றும் சுக்கிரன் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் இருப்பர். இப்படியான நிகழ்வு கடைசியாக 1728 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இப்படியான அரிய நிகழ்வு 2025 ஆம் ஆண்டின் ரக்ஷா பந்தன் நாளில் நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக வருமானத்தில் உயர்வு, பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதோடு, வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாளில் நிகழும் அரிய கிரக நிகழ்வுகளால், திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். சட்ட விஷயங்களில் சாதகமான முடிவுகளைப் பெறக்கூடும். புதிய சாதனைகளைப் புரிவீர்கள். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாளில் நிகழும் அரிய கிரக நிகழ்வுகளால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. சமூகத்தில் மரியாதை கிடைக்கும். பலவிதமான நல்ல செய்திகளைப் பெறக்கூடும். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாளில் நிகழும் அரிய கிரக நிகழ்வுகளால் சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலத்தில் புதியதாக ஏதாவது கற்று கொள்ள ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











