Latest Updates
-
ஓட்ஸ் இட்லியும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா -
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஆர்சிபி வெற்றிக்கு பிறகு விராட் - அனுஷ்கா ஆடிய டான்ஸ்! இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் வீடியோ இதோ! -
சாணக்கிய நீதி படி இந்த 2 பழக்கங்கள் உங்களின் விதியையே மாற்றும் சக்தி உள்ளவையாம் - என்னென்ன பழக்கங்கள் தெரியுமா
Guru Peyarchi 2026: உச்சம் பெறும் குருவால் இந்த 6 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Guru Peyarchi 2026: நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக குரு பகவான் கருதப்படுகிறார். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, குரு பகவான் மே 26 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜூன் 02 ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்கு செல்கிறார். இந்த குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றான ஹன்ஸ் ராஜயோகம் உருவாகிறது. அதுமட்டுமின்றி இந்த கடக ராசியானது குரு பகவான் உச்சம் பெறும் ராசியாகும். இந்த கடக ராசியில் குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி வரை இருப்பார்.
இந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 6 ராசிக்காரர்கள் குருவின் அருளால் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது 2026 குரு பெயர்ச்சியால் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை அதிகம் சந்தித்தாலும், அதைவிட வருமானம் அதிகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதுவும் சுப செலவுகளையே அதிகம் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வேலையில் உள்ள பிரச்சனைகள் தீரும். முன்னேற்ற பாதை திறக்கும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டாலும், அதற்கு பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் தீர்வு காண்பது உத்தமம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். குடும்ப மற்றும் தன வீட்டில் குரு இருப்பதால், மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்களும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இக்காலத்தில் உறவுகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். மேலும் குருவின் 5 ஆம் பார்வை விழுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பல புதிய நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக வாங்க நினைத்த பொருட்களை வாங்க பணத்தை செலவிடுவீர்கள். வேலையில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதை செய்தாலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு உச்ச பலனைத் தரப்போகிறார். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். மேலும் வேலையில் சில போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும். இருந்தாலும், அதை சமாளிக்கக்கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் இருக்கும். முக்கியமாக வேலை தொடர்பாக எடுக்கும் எந்த ஒரு புது முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, வாகனம், நிலம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். சுப செலவுகளை செய்ய நேரிடும். சமூகத்தில் செவ்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். இதன் மூலம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும், நல்ல லாபமும் கிடைக்கும். முக்கியமாக குருவின் அருளால் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். அதுவும் குருவின் 7 ஆம் பார்வை ராசி மீது விழுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தடைகளை சந்தித்தாலும், அதில் வெற்றியைக் காண்பார்கள். எடுக்கும் ஒவ்வொரு வேலையையும் சிக்கலின்றி சுமூகமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதை உணர்வீர்கள். இக்காலத்தில் வேலை தொடர்பாக பல பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications





