Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
100 ஆண்டுகளுக்கு பின் சிவராத்திரி அன்று உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
Gajkesari Rajyog On Aadi Shivratri 2025: இந்த ஆண்டின் ஆடி மாதம் பிறந்துவிட்டது. இந்த ஆடி மாதம் சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த ஆடி மாதத்தில் வரும் சிவராத்திரி நாளில் ஒரு அரிய நிகழ்வு உருவாகவுள்ளது.
ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதுடன், மற்ற கிரகங்களோடு சேர்ந்து யோகங்களையும் உருவாக்குகின்றன. இவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் சிவராத்திரி ஜூலை 23 ஆம் தேதி வருகிறது.

இந்நாளில் மிகவும் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் ஆடி சிவராத்திரி நாளில் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் காணப்படும்.
இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்து, நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, சமூகத்தில் மரியாதை போன்றவற்றை பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இப்போது 100 ஆண்டுகளுக்கு பின் ஆடி மாத சிவராத்திரி நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகமானது உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் ஈர்க்கப்பட்டு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சில் செல்வாக்கு அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மார்கெட்டிங், வங்கி, ஊடகம் போன்ற துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். குறிப்பாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப் போகிறது. வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் வரலாம். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையலாம். தொழிலதிபர்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கான புதிய வாய்ப்புகளைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆளுமை மேம்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











