Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
ஆண்களே! உங்க மனைவி கூட நீங்க சண்டை போடும்போது... 'இந்த' 5 விஷயம் அத ரொம்ப மோசமாக்குமாம்!
நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் துணையை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அடிக்கடி உங்கள் மனைவியை நீங்கள் காயப்படுத்தும்படி நடந்துகொள்வது நல்லதல்ல. பொதுவாக திருமண உறவில் சண்டை போடாத தம்பதிகளே இல்லை எனலாம்.
பெரும்பாலும் எல்லா தம்பதிகளும் சண்டை போடுகிறார்கள், சிறிது நேரத்தில் சமாதானம் ஆகிறார்கள். ஆனால், உங்கள் மனைவியை உணர்ச்சி ரீதியாக பாதிக்கக்கூடிய வகையில், நீங்கள் சண்டை போடுவது, உறவில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் விஷயங்கள் பெரிதாகி, சிறிய அல்லது தீவிரமான பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.

பிரச்சனைகள் அல்லது மோதல்களைத் தீர்ப்பதற்கு வாதிடுவது பரவாயில்லை, ஆனால் தீர்வுகளுக்குப் பதிலாக வாதங்கள் தீப்பிடித்து மோசமான திருப்பத்தை எடுக்கும்போது விஷயங்கள் தவறாக நடக்கத் தொடங்குகின்றன. இது ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவது, தகவல்தொடர்பு இல்லாமை அல்லது கண் தொடர்பு பராமரிக்காதது போன்ற எளிமையான விஷயங்களால் ஏற்படலாம்.
எனவே, உங்கள் மனைவியுடன் உங்கள் வாக்குவாதங்களை மோசமாக்கும் ஐந்து விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் பேசமால் கத்துகிறீர்கள்
உங்கள் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்போது, நீங்கள் மற்ற நபருடன் கோபமாக இருக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து உங்கள் கருத்தை நிரூபிக்க கத்துவது அல்லது முரட்டுத்தனமாக பேசுவது பொதுவானது. இது பெரும்பலான மக்கள் செய்யும் தவறு. கோபத்தில் உங்கள் துணையை கடுமையாகப் பேசுவது அல்லது விமர்சிப்பது, அவர்களை ஆழமாக காயப்படுத்தும்.
நீங்கள் கோபத்தில் பேசிய வார்த்தைகளை திரும்ப பெறுவது என்பது முடியாத காரியம். நீங்கள் கோபமாக இருக்கும் போது, உங்கள் துணைக்கு உணர்ச்சி ரீதியாக காயத்தை ஏற்படுத்தலாம். இது நீங்கள் நினைத்ததை விட உறவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, அடுத்த முறை, உங்கள் துணையுடன் நீங்கள் வாக்குவாதம் செய்யும்போது, மோதலை அமைதியான முறையில் தீர்க்க விரும்பினால், கத்தாதீர்கள் அல்லது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். எப்போதும் பிரச்சனைகளை பொறுமையாக கையாளுங்கள்.
உணர்வுகளை புரிந்துகொள்ளமல் இருப்பது
உங்கள் கூட்டாளியின் உணர்ச்சிகளை அங்கீகரிப்பதையோ அனுதாபத்தையோ புறக்கணிப்பது ஒரு வாதத்தில் நெருப்பைத் தூண்டும். அவர்களின் உணர்வுகளை நிராகரிப்பது அல்லது அவர்கள் ஏன் புண்படுகிறார்கள் அல்லது கோபப்படுகிறார்கள் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது அவர்களை உங்களுக்கு முக்கியமற்றவர்களாகவும், புறக்கணிக்கப்பட்டதாகவும் உணர வைக்கும்.
நீங்கள் அவர்களின் உணர்ச்சிகளை நிராகரிக்கும்போது, அது அவர்கள் கேட்காததாகவும் முக்கியமற்றதாகவும் உணர வைக்கும். இது உறவில் விரக்தியை மட்டுமே சேர்க்கும். எனவே, அவர்கள் சொல்வ வருவதை காது கொடுத்து கேளுங்கள். உங்கள் துணையை காயப்படுத்தியது பற்றி விவாதிக்கும் போது கொஞ்சம் அனுதாபம் காட்ட வேண்டும்.
வாதத்தை நடுவிலே விட்டுவிடுதல்
வாக்குவாதத்தின் போது உங்களை கட்டுப்படுத்துவது அல்லது தனிமைப்படுத்திக்கொள்வது போன்றவை பிரச்சனைக்கு நீங்கள் முடிவெடுப்பதற்கு முன்பு உங்களை பாதிக்கலாம். இது சிக்கலைத் தீர்க்காமல் உங்கள் உறவு வாழ்க்கைக்கு மோசமாக அமையலாம். உங்கள் உணர்ச்சிகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள முடியாது என்பதையும், சண்டையைத் தீர்த்து நடுவழியில் விட்டுச் செல்வதையும் உங்கள் துணையிடம் தெரிவிக்க வேண்டும்.
வாதத்தின் இடையிலே விட்டு செல்வது, உங்கள் இருவருக்கும் இடையே ஒரு தகவல்தொடர்பு தடையை உருவாக்குகிறது. இது தகவல தொடர்புகளை தடுப்பதால், சிக்கலைத் தீர்க்க இயலாது. அதற்கு பதிலாக, உரையாடலில் ஈடுபட முயற்சி செய்யுங்கள் மற்றும் ஒருவருக்கொருவர் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவது
ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது உங்கள் வாதங்களை மோசமாக்கும். வாக்குவாதத்திற்கு என்ன காரணம் என்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும்போது, நீங்கள் குழப்பமடைந்து, முன்பு இருந்ததை விட அதிக மோதலில் ஈடுபடலாம். இது பிரச்சனையை இன்னும் ஆழமாக கொண்டு செல்ல வாய்ப்பு அதிகம். இவை சிக்கலைத் தீர்ப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தள்ளிவிடும்.
மேலும் பகைமையின் சூழ்நிலையை உருவாக்கும், அங்கு நீங்கள் இருவரும் மோதலைத் தீர்க்க முடியாது. எனவே, அடுத்த முறை, உங்கள் கவனத்தை ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, பிரச்சனையை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கும், யார் காரணம் என்று பிரித்து, பிறகு நீங்கள் எப்படி அதை சரி செய்யலாம் எனவும் யோசியுங்கள்.
நீங்கள் அவர்களுக்கு எதிராக நினைக்கிறீர்கள்
நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் எதிர்க்கிறீர்கள் என்று நினைப்பது ஒரு மோதலைத் தீர்ப்பதற்கு நீங்கள் வைத்திருக்கக்கூடிய மிகவும் தவறான அணுகுமுறையாகும். ஒரு சண்டை அல்லது பிரச்சனையின் போது, உங்கள் மனைவிக்கு எதிராக நீங்கள் இல்லை, ஆனால் நீங்கள் இருவரும் பிரச்சனைக்கு எதிராக இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இது ஒரு பக்கம் வெற்றிபெற வேண்டிய போர்க்களம் அல்ல, மாறாக பிரச்சனை அல்லது மோதலை சரிசெய்ய நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டிய போர்க்களம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிக்கலைத் தீர்க்க ஒன்றாக வேலை செய்யுங்கள். எந்த நேரத்திலும் நீங்கள் அழகான மகிழ்ச்சியான தம்பதிகளாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications












