Just In
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 12 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கள்ள உறவில் நீங்கள் இருக்கிறீர்களா? அப்ப கண்டிப்ப இத தெரிஞ்சிக்கோங்க…!
திருமணமாகி, வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருந்தபோதும் பலர் மூன்றாவது நபரிடம் உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.
சில சமயங்களில், திருமணமாகி, வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருந்தபோதும் பலர் மூன்றாவது நபரிடம் உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் இந்த உணர்ச்சிகளை நிர்வகிக்க அல்லது நியாயப்படுத்துவது மிகவும் கடினம். இது இறுதியில் திருமண வாழ்க்கையில் விவாகரத்தை வழிவகுக்கும். தன் துணைக்குத் துரோகம் செய்யும் கள்ள உறவு குறுகிய கால மகிழ்ச்சியைத் தரும்.
ஆனால் அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அவர்களின் திருமண வாழ்க்கையும் கூட மகிழ்ச்சியைத் தரக்கூடும். இதன்காரணமாக ஒரு நபர் தனது தவறை உணர்ந்தவுடன், திருமணத்திற்குப் புறம்பான உறவை முடிவுக்கு கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஒரு வேளை, நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் இந்த சூழ்நிலையைச் சந்திக்கிறீர்கள் என்றால், அவர்களின் வாழ்க்கை பாதையைச் சரிசெய்து, பாதிப்பில்லாமல் முழுவதுமாக வெளியே வர இங்கே சில தகவல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.
காரணத்தைக் கண்டறியவும்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், திருமணத்திற்குப் புறம்பான உறவில் நீங்களோ உங்களுடைய துணையோ ஈடுபடுகிறார்கள் என்றால், உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கிறது என்பதன் அறிகுறியாகும். எனவே திருமணத்தில் உள்ள அடிப்படை சிக்கல்களை வெளிக்கொணர்வது முக்கியம். அப்படியில்லை என்றால் இது திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபடுவதற்கு உங்களை அல்லது உங்கள் வாழ்க்கை துணையைத் தூண்டக்கூடும்.
MOST READ: வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
உங்கள் துணையிடம் சொல்ல வேண்டுமா?
நீங்கள் திருமணத்திற்குப் புறம்பான கள்ள உறவில் இருக்கும் விஷயத்தில் இது மிகவும் கடினமான கட்டமாகும். ஏனென்றால் இதைபற்றி உங்கள் துணையிடம் சொல்ல வேண்டுமா? என்று யோசித்துக்கொண்டிருப்பீர்கள். இதில், பெரும்பாலோனோர் கூறுவது, கணவன் அல்லது மனைவிக்கு இதைப் பற்றி தெரியப்படுத்துவது சிறந்தது என்று. ஆனால், இது உங்கள் திருமணத்தில் உள்ள சிக்கல்களை மேலும் மோசமாக்கும் என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
சூழ்நிலை மிக முக்கியம்
மேலும், உங்களுடைய கள்ள உறவு குறித்து உங்கள் துணையிடம் சொல்ல எது சரியான நேரம் என்பதை முக்கியமாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கான சரியான நேரம் மற்றும் சூழ்நிலையை கவனமாக மதிப்பீடு செய்த பின்னரே, உங்கள் தவறான எண்ணத்தைப் பற்றி உங்கள் துணையிடம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
தொடர்புகளை கட்டுப்படுத்த வேண்டும்
கள்ள உறவை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து உங்கள் துணையிடம் நீங்கள் பேசியபின், உங்கள் இரண்டாம் உறவு துணையிடம் நீங்கள் எடுத்த முடிவைப் பற்றி பேச வேண்டும். பின்னர் அவருடனான அனைத்து தொடர்புகளையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என்றாலும், இது ஒரு வகையான தொடக்கமாகும்.
MOST READ: ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
தங்கள் பொறுப்பை ஏற்க வேண்டும்
வாழ்க்கையின் மிகமுக்கியமானது தங்களுடைய பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவது. உங்களுடைய துணை அவரின் கடந்த கால உறவை பற்றியும், தான் செய்த தவறுகளை பற்றியும் உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார் என்றால், அதை ஒருபோதும் சொல்லிக்காட்டக்கூடாது. ஆனால், இங்கு நிறைய பேர் அப்படி இருப்பதில்லை. கடந்த காலத்தைப் பற்றி குத்திக்காட்டி புண்படும் படிதான் பேசுகிறார்கள். புண்படுத்தும் மற்றும் புண்படுத்தாத வாழ்க்கைத் துணை இருவரும் தங்கள் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.
மன்னிப்பு கோரவேண்டும்
குற்றம் சாட்டப்பட்ட நபர் அவரது செயல் குறித்து உண்மையிலேயே வருந்தப்பட்டு துணையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயங்களை ஏற்றுக்கொண்டு, உங்களை மன்னிக்கும் வாழ்க்கை துணை உங்களுக்கு அமைந்திருந்தால், உங்கள் உறவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்ய வேண்டும். புண்படுத்தாத வாழ்க்கைத் துணை கிடைப்பது மிக அதிர்ஷ்டம்.
பின்தொடரக்கூடாது
திருமணத்திற்குப் புறம்பான உறவை முடிவுக்கு கொண்டுவருவதன் முக்கிய நோக்கம் கடந்த காலத்தை பின்னுக்குத் தள்ளுவதாகும். முடிந்த கள்ள உறவு துணை உங்கள் வாழ்க்கையில் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ளவும். அந்த மூன்றாவது நபர் உங்களை பின் தொடரும்போதும், அவருடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க முயற்சிக்கும் நோக்கத்தை இது முற்றிலுமாக தோற்கடிக்கும்.
நம்பிக்கையை வளர்க்க வேண்டும்
ஒரு துணை வழிதவறும்போது, மற்ற துணைக்கு நம்பிக்கை பிரச்சினைகள் இருக்கும் என்பது வெளிப்படையானது. அது அவர்களின் தகவல்தொடர்புகளில் பிரதிபலிக்கும். அடிக்கடி சண்டை போடுவது மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இது ஆரோக்கியமான தகவல்தொடர்புகளை தடுத்து நிறுத்த வேண்டிய நேரம் அல்ல. இருவரும் நம்பிக்கையை வளர்ப்பதிலும், அவர்களின் தொடர்பு திறனை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
தயக்கம் கொள்ள வேண்டாம்
திருமணத்திற்கு புறம்பான உறவை முடிவுக்கு கொண்டுவருவது எளிதான காரியமல்ல. ஆனால் நீங்கள் உங்கள் மனதையும், உடலையும் அதற்காகத் தயார் படுத்திக்கொண்டால், அதைச் செய்ய தயங்க வேண்டாம். தேவைப்பட்டால் நீங்களும் உங்கள் துணையும் உளவியல் நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். அதைத்தொடர்ந்து, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் மட்டும் நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவீர்கள்.