Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
கள்ள உறவில் நீங்கள் இருக்கிறீர்களா? அப்ப கண்டிப்ப இத தெரிஞ்சிக்கோங்க…!
திருமணமாகி, வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருந்தபோதும் பலர் மூன்றாவது நபரிடம் உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.
சில சமயங்களில், திருமணமாகி, வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருந்தபோதும் பலர் மூன்றாவது நபரிடம் உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் இந்த உணர்ச்சிகளை நிர்வகிக்க அல்லது நியாயப்படுத்துவது மிகவும் கடினம். இது இறுதியில் திருமண வாழ்க்கையில் விவாகரத்தை வழிவகுக்கும். தன் துணைக்குத் துரோகம் செய்யும் கள்ள உறவு குறுகிய கால மகிழ்ச்சியைத் தரும்.

ஆனால் அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அவர்களின் திருமண வாழ்க்கையும் கூட மகிழ்ச்சியைத் தரக்கூடும். இதன்காரணமாக ஒரு நபர் தனது தவறை உணர்ந்தவுடன், திருமணத்திற்குப் புறம்பான உறவை முடிவுக்கு கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஒரு வேளை, நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் இந்த சூழ்நிலையைச் சந்திக்கிறீர்கள் என்றால், அவர்களின் வாழ்க்கை பாதையைச் சரிசெய்து, பாதிப்பில்லாமல் முழுவதுமாக வெளியே வர இங்கே சில தகவல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.

காரணத்தைக் கண்டறியவும்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், திருமணத்திற்குப் புறம்பான உறவில் நீங்களோ உங்களுடைய துணையோ ஈடுபடுகிறார்கள் என்றால், உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கிறது என்பதன் அறிகுறியாகும். எனவே திருமணத்தில் உள்ள அடிப்படை சிக்கல்களை வெளிக்கொணர்வது முக்கியம். அப்படியில்லை என்றால் இது திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபடுவதற்கு உங்களை அல்லது உங்கள் வாழ்க்கை துணையைத் தூண்டக்கூடும்.

உங்கள் துணையிடம் சொல்ல வேண்டுமா?
நீங்கள் திருமணத்திற்குப் புறம்பான கள்ள உறவில் இருக்கும் விஷயத்தில் இது மிகவும் கடினமான கட்டமாகும். ஏனென்றால் இதைபற்றி உங்கள் துணையிடம் சொல்ல வேண்டுமா? என்று யோசித்துக்கொண்டிருப்பீர்கள். இதில், பெரும்பாலோனோர் கூறுவது, கணவன் அல்லது மனைவிக்கு இதைப் பற்றி தெரியப்படுத்துவது சிறந்தது என்று. ஆனால், இது உங்கள் திருமணத்தில் உள்ள சிக்கல்களை மேலும் மோசமாக்கும் என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

சூழ்நிலை மிக முக்கியம்
மேலும், உங்களுடைய கள்ள உறவு குறித்து உங்கள் துணையிடம் சொல்ல எது சரியான நேரம் என்பதை முக்கியமாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கான சரியான நேரம் மற்றும் சூழ்நிலையை கவனமாக மதிப்பீடு செய்த பின்னரே, உங்கள் தவறான எண்ணத்தைப் பற்றி உங்கள் துணையிடம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

தொடர்புகளை கட்டுப்படுத்த வேண்டும்
கள்ள உறவை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து உங்கள் துணையிடம் நீங்கள் பேசியபின், உங்கள் இரண்டாம் உறவு துணையிடம் நீங்கள் எடுத்த முடிவைப் பற்றி பேச வேண்டும். பின்னர் அவருடனான அனைத்து தொடர்புகளையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என்றாலும், இது ஒரு வகையான தொடக்கமாகும்.

தங்கள் பொறுப்பை ஏற்க வேண்டும்
வாழ்க்கையின் மிகமுக்கியமானது தங்களுடைய பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவது. உங்களுடைய துணை அவரின் கடந்த கால உறவை பற்றியும், தான் செய்த தவறுகளை பற்றியும் உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார் என்றால், அதை ஒருபோதும் சொல்லிக்காட்டக்கூடாது. ஆனால், இங்கு நிறைய பேர் அப்படி இருப்பதில்லை. கடந்த காலத்தைப் பற்றி குத்திக்காட்டி புண்படும் படிதான் பேசுகிறார்கள். புண்படுத்தும் மற்றும் புண்படுத்தாத வாழ்க்கைத் துணை இருவரும் தங்கள் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

மன்னிப்பு கோரவேண்டும்
குற்றம் சாட்டப்பட்ட நபர் அவரது செயல் குறித்து உண்மையிலேயே வருந்தப்பட்டு துணையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயங்களை ஏற்றுக்கொண்டு, உங்களை மன்னிக்கும் வாழ்க்கை துணை உங்களுக்கு அமைந்திருந்தால், உங்கள் உறவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்ய வேண்டும். புண்படுத்தாத வாழ்க்கைத் துணை கிடைப்பது மிக அதிர்ஷ்டம்.

பின்தொடரக்கூடாது
திருமணத்திற்குப் புறம்பான உறவை முடிவுக்கு கொண்டுவருவதன் முக்கிய நோக்கம் கடந்த காலத்தை பின்னுக்குத் தள்ளுவதாகும். முடிந்த கள்ள உறவு துணை உங்கள் வாழ்க்கையில் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ளவும். அந்த மூன்றாவது நபர் உங்களை பின் தொடரும்போதும், அவருடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க முயற்சிக்கும் நோக்கத்தை இது முற்றிலுமாக தோற்கடிக்கும்.

நம்பிக்கையை வளர்க்க வேண்டும்
ஒரு துணை வழிதவறும்போது, மற்ற துணைக்கு நம்பிக்கை பிரச்சினைகள் இருக்கும் என்பது வெளிப்படையானது. அது அவர்களின் தகவல்தொடர்புகளில் பிரதிபலிக்கும். அடிக்கடி சண்டை போடுவது மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இது ஆரோக்கியமான தகவல்தொடர்புகளை தடுத்து நிறுத்த வேண்டிய நேரம் அல்ல. இருவரும் நம்பிக்கையை வளர்ப்பதிலும், அவர்களின் தொடர்பு திறனை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

தயக்கம் கொள்ள வேண்டாம்
திருமணத்திற்கு புறம்பான உறவை முடிவுக்கு கொண்டுவருவது எளிதான காரியமல்ல. ஆனால் நீங்கள் உங்கள் மனதையும், உடலையும் அதற்காகத் தயார் படுத்திக்கொண்டால், அதைச் செய்ய தயங்க வேண்டாம். தேவைப்பட்டால் நீங்களும் உங்கள் துணையும் உளவியல் நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். அதைத்தொடர்ந்து, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் மட்டும் நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவீர்கள்.



Click it and Unblock the Notifications











