Just In
- 7 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 8 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 10 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உங்க கணவன் அல்லது மனைவி கோபமாக இருக்கும்போது தெரியாம கூட இந்த வார்த்தையை சொல்லிடாதீங்க!
உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை அவர்களை காயப்படுத்த நீங்கள் சொல்வது அவர்களை மேலும் எரிச்சலடையச் செய்யும். கோபத்தில், நாம் மற்றவரை காயப்படுத்த எல்லாவற்றையும் முயற்சிப்போம்.
ஆண், பெண் திருமண உறவு என்பது பல சிக்கல்கள் மற்றும் கடமைகள் நிறைந்ததாகதான் உள்ளது. பொதுவாக சண்டை இல்லாமல் உறவில் சுவாரஸ்யமே இருக்காது. சண்டை போட்டு, சமாதானம் செய்வது உறவில் மிக அழகான உணர்வுகளை கொடுக்கும். ஆனால், கோபமாக ஒருவரை தாக்கி ஒருவர் சந்தியிட்டு கொள்வது உறவுக்கும் வாழ்க்கைக்கும் நல்லதல்ல. நாம் ஒருவருக்கொருவர் கோபமாக இருக்கும்போது மன்னிக்க முடியாத பல மோசமான வழிகளில் நடந்துகொள்கிறோம். அந்த நேரத்தில் நம்மில் பலர் நம் துணையின் கண்களை சந்திக்க முடியாமல் மிகவும் தாழ்ந்து விடுகிறோம். சண்டை இல்லாத உறவுகளே இவ்வுலகில் இருக்க முடியாது.
ஆனால், எதற்காக சண்டையிடுகிறோம், சண்டையிடும் போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம், என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. கோபத்தில் நீங்கள் தவறாக ஒரு வார்த்தை சொல்லி விட்டால், அது உங்கள் உறவையே பாதிக்கலாம். நீங்கள் கோபமாக இருக்கும்போதெல்லாம் சொல்லவோ செய்யவோ வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
குற்றச்சாட்டுகளை கூறுவது
சண்டை நடக்கும்போது, பொதுவாக நிதானத்தை இழந்துவிட்டு கோபமாகபேசுவோம். கோபமாக இருக்கும்போது நிதனமாக யோசித்து பேச வேண்டும். ஏனெனில், கோபத்தில் நாம் விடும் வார்த்தை உறவுக்குள் பிரிவை ஏற்படுத்தலாம். நிதானத்தை இழக்கும்போது, மனிதர்களாகிய நமக்கு சில போக்குகள் உள்ளன. உண்மையில் மிகவும் அது ஆபத்தானவை. அவை அனைத்தையும் அழித்து பின்னர் வருத்தப்பட வைக்கும். "நீங்கள் ஒருபோதும் எனக்காக ஏதும் செய்ததில்லை" மற்றும் "நீங்கள் எப்போதும் இப்படித்தான்" என்று தொடங்கும் குற்றச்சாட்டு உரையாடல்களை உங்கள் துணையிடம் வைக்காதீர்கள். உங்கள் பங்குதாரர் அதைச் செய்கிறார் என்றால், நீங்களும் அதையே செய்யக்கூடாது.
ஏளனமாக பேசுவது
சண்டையின்போது, உங்கள் துணை அவரை பற்றி அல்லது அவருடைய நிலையை பற்றி உங்களிடம் விவரிக்கும்போது, "அதனால் என்ன?" மற்றும் "யார் கவலைப்படுகிறார்கள்" என்று கூறக்கூடாது. உங்கள் துணையின் மீது உங்களுக்கு ஆர்வம் இல்லை அல்லது அவர்களின் கருத்துக்களை இல்லை என்று நினைக்க வைக்கும் மொழியைப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் உங்கள் துணையை பற்றி நீங்கள் எந்த கவலையும் கொண்டிருக்கவில்லை என்று அவர்களுக்கு தோன்றும். நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை ஆனால், உங்கள் துணை கூறுவதை நீங்கள் கேட்பது முக்கியம்.
வேண்டுமென்றே அவர்களை காயப்படுத்துவது
உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை அவர்களை காயப்படுத்த நீங்கள் சொல்வது அவர்களை மேலும் எரிச்சலடையச் செய்யும். கோபத்தில், நாம் மற்றவரை காயப்படுத்த எல்லாவற்றையும் முயற்சிப்போம். ஆனால் உறவில் இருக்கும்போது, இது மன சங்கடத்தை ஏற்படுத்தி உறவில் விரிசலை ஏற்படுத்தலாம். உங்கள் கூட்டாளர்களை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அதனால் அவர்களின் ஆழ்ந்த அச்சங்களை நீங்கள் தாக்க முடியும். ஆனால், நீங்கள் அந்த நிலைக்குச் சென்றால் அவர்களின் நம்பிக்கையை நிரந்தரமாக இழப்பீர்கள். இருவரும் அமைதியாக இருக்கும் போது அமைதியாக இருந்து பிரச்சினையைப் பற்றி பேசுவதே சிறந்தது.
கடந்த காலத்தை பற்றி பேசுவது
உங்கள் சண்டையில் கடந்த கால பிரச்சினைகளை தோண்டி எடுக்காதீர்கள். எப்போதும், கடந்த விஷயங்களை நிகழ்காலத்தில் சொல்லாதீர்கள். இப்போதுள்ள சண்டையை மட்டும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில், நீங்கள் ஏதாவது உங்கள் துணையிடம் கடந்த கால விஷயங்களை இழுத்து பேசுவது, சண்டையை மேலும் அதிகரிக்கும். மேலும், சண்டையில் நாம் கூறிய வார்த்தைகளை திரும்பப் பெற முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால், பொறுமையாக இருந்து பிரச்சனையை சரிசெய்யுங்கள்.
பெயர் அழைத்தல்
உறவில் பெயர் சொல்லி அழைப்பது உங்களுக்கு நல்ல நினைவாக இருக்கலாம். ஆனால், சண்டையிடும்போது, பெயரை சொல்லி அழைக்காதீர்கள். சண்டை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், நீங்கள் ஒருபோதும் பெயர் சொல்லி அழைப்பதை நாடக்கூடாது. இது உங்கள் உறவில் இருந்து நிறைய குறைக்கிறது. இந்த வார்த்தைகள் குணமடையாது, அவை நீண்ட நேரம் நீடிக்கும்.
சுயநலவாதி என்று கூறக்கூடாது
கோபம் நமது தற்காப்பு உணர்ச்சிகளையும், நீங்கள் யாருடன் வாதிடுகிறீர்களோ அவரைத் தாக்கி காயப்படுத்துவதற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது. இது "நீங்கள் மிகவும் சுயநலவாதி" அல்லது "நீங்கள் மிகவும் சூழ்ச்சியாக இருக்கிறீர்கள்" போன்ற குற்றச்சாட்டுகளை உங்கள் துணையிடம் கூறக்கூடாது. இத்தகைய விமர்சனப் பேச்சு உங்கள் துணையை புண்படுத்துவது மட்டுமின்றி, உறவில் விரிசலையும் ஏற்படுத்தும்.