பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…!

திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்திருந்தது.

2004ஆம் ஆண்டு உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 60 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் மற்றொரு திருமணமான நபருடன் கள்ள உறவில் இருக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கிறது. பொதுவாக கள்ள உறவில் அதிகம் ஈடுபடுவது ஆண்களே என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று ஆண்கள், பெண்கள் என்று பெரும்பாலானோர் கள்ள உறவில் ஈடுபடுகின்றனர். கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் என்பது அளவற்றது. ஆண்கள் பலதார முறை என்று இருந்து வந்தது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து அவர்களுடன் உடலுறவில் ஈடுபடலாம்.

Most women have affairs for different reasons than men

ஆனால், பெண்களுக்கு ஒரே கணவன். அவருடன் மட்டும்தான் உறவில் இருக்க வேண்டும். கணவன் இறந்த பின்பு சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், விதவைகளுக்கு மறுமணம் மறுப்பு என்று அவர்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மிகவும் கொடுமைபடுத்தப்பட்டனர். தற்போது அந்த நிலமை மாறி வருகிறது. ஒரு பெண் தான் விரும்பும் நபருடன் உறவு வைத்துக்கொள்வது என்பது அது அவரது சொந்த உரிமையாக மாறி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கசக்கும் திருமண உறவு

கசக்கும் திருமண உறவு

தற்போது உள்ள பெரும்பாலான ஆண்கள் திருமணத்திற்கு முன்பு சொல்லும் ஒரு வார்த்தை என்னவென்றால் தன்னுடைய மனைவி திருமணத்திற்கு முன் எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடன் மட்டுமே உறவில் இருக்க வேண்டும் என்பதுதான். திருமணம் முடிந்து சிலகாலம் வரை கணவனுடன் இருக்கும் பெண்களில் சிலர் ஏன் கள்ள உறவை நோக்கி செல்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக பார்க்க வேண்டும். ஆண், பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் நிறைந்தது.

கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல

கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல

திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்திருந்தது. மேலும், கள்ள உறவை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அதிரடியாக ரத்து செய்திருந்தது. வயது வந்த ஆண், பெண் தங்களுக்கு பிடித்த நபர்களுடன் உடலுறவு கொள்வது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்.

கணவர் எஜமானர் அல்ல

கணவர் எஜமானர் அல்ல

கள்ள உறவு விவாகரத்துக்கு வழிவகுக்கும். ஆனால், அது ஒரு குற்றமாகாது. கள்ள உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது குற்றம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. பெண்களுக்கு கணவர்கள் என்பவர் ஒரு பாதுகாப்பானர்வர்கள் தான். அவர்கள் ஒன்றும் எஜமானர்கள் கிடையாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு கலாச்சார போராளிகளுக்கு பெரும் இடியாக அமைந்தது.

எதிர்பார்ப்பு பூர்த்தியடையாத போது...

எதிர்பார்ப்பு பூர்த்தியடையாத போது...

தான் திருமணம் செய்து கொள்ளும் ஆண் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பார்கள். தங்களுடைய திருமண வாழ்க்கை எப்படி நடத்தலாம், தனது கணவர் தன்னிடம் எப்டியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என பல்வேறு கற்பனை கோட்டைகளை மனதில் கட்டி வைத்திருப்பார்கள். அந்த கோட்டை இடிந்து தரைமட்டம் ஆகும்போது, அதுபோன்று இருக்கும் வேறு ஒரு ஆணுடன் பழக ஆரம்பிக்கின்றனர். இப்படியாக கள்ள உறவு ஏற்படுகிறது.

கொடுமைப்படுத்துதல்

கொடுமைப்படுத்துதல்

மனைவியை மனிதனாக கருதாமல் தன்னனுடைய அடிமையாக கருதி அவர்களை அடிப்பது, கொடுமை படுத்துவது, சந்தேகப்படுவது போன்ற செயல்களினால் பெண்களுடைய வாழ்க்கை வேதனைக்குள்ளாகும். அந்த வேதனையை வேறொரு ஒரு ஆண் கூட தீர்த்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.

மேலும் இதுபோன்ற சமயங்களில் தன் கணவனிடம் இருந்து கிடைக்காத அன்பும், அக்கரையும் வேறு ஆணிடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில், அந்த ஆண் மீது மனைவிக்கு ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதுவே அவர்கள் கள்ள உறவில் ஈடுபட வழிவகுக்கும்.

பாதுகாப்பு இல்லாத போது..

பாதுகாப்பு இல்லாத போது..

பெண்கள் தன் துணையிடம் பெரிதும் எதிர்பார்ப்பது பாதுகாப்பு தான். அந்த பாதுகாப்பு தன் கணவனிடம் அல்லாமல், வேறொரு நபரிடம் இருந்து கிடைக்கிறது என்கிற பட்சத்தில் அவருக்கு வேறு நபரிடம் ஈர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. இந்த காரணங்களுக்காக சில பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுகின்றனர்.

நேரம் செலவிடாமல் இருப்பது..

நேரம் செலவிடாமல் இருப்பது..

உங்களுடைய வாழ்க்கை துணைக்காக நேரத்தை நீங்கள் செலவிடவேண்டும். அலுவலகம் செல்லும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி தன்னுடைய கணவர் தன்னுடன் தனிமையில் நேரத்தை செலவிட வேண்டும் என்று விரும்புவார்கள். நீங்கள் அதற்கான நேரத்தை அவர்களுக்கு வழங்காதபோது, அந்த நேரங்களில் வேறொரு ஆண் நபரின் நட்பு உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். காலப்போக்கில் அந்த நட்பு கள்ள உறவாகவும் மாற வாய்ப்புள்ளது.

பிரிந்திருக்கும் போது..

பிரிந்திருக்கும் போது..

கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவு உருவாகின்றன. நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன. தங்களுடைய உடல் தேவையை பூர்த்தி செய்ய அவர்களுக்கு ஒரு துணை அந்நேரத்தில் தேவைப்படும்போது, கள்ள உறவில் அவர்கள் இறங்குகிறார்கள். எல்லா குடும்பங்களிலும் இவை நடப்பதில்லை என்றாலும், மற்ற குடும்பங்களை விட இந்தக் குடும்பங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஒரு சில ஆய்வு முடிவுகள்.

உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இருப்பது…

உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இருப்பது…

பெண்கள் தங்கள் கணவனிடம் மிகவும் எதிர்பார்ப்பது அவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளதாபோது, கணவன் மீது ஒருவித வெறுப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது. அந்த சமயங்களில் அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வேறொரு ஆண் நபரின் நட்பு காதலாக கூட மாற வாய்ப்புள்ளது.

உடலுறவில் திருப்தியின்மை

உடலுறவில் திருப்தியின்மை

பெரும்பாலான பெண்கள் தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருக்கின்றன. இதன் காரணமாகதான் பெண்கள் அதிகமாக கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்கிறது சில ஆய்வுகள். ஆண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு, பெண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு. வேறொரு பெண்ணுடன் ஆண் மிக சுலபமாக உடலுறவு வைத்துக் கொள்ளவார்கள். ஆனால் பெண்கள், உணர்வு ரீதியான உடலுறவை எதிர்பார்ப்பார்கள்.

உடலுறவில் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால், அது அவர்களுக்கு பிடித்தது போன்றோ, அவர்கள் விரும்புவது போன்றோ நடக்கிறதா என்றால் அது மிகக்குறைந்த அளவுதான். பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் அவர்களுடைய தேவை முடிந்ததும் பின்வாங்கி விடுகிறார்கள். பெண்களின் தேவையை பூர்த்தி செய்ய அவர்கள் விரும்புவதில்லை. அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேறொரு உறவை தேடி அவர்கள் செல்கிறார்கள். குறிப்பாக தாம்பத்திய வாழ்க்கை சரியாக இல்லை என்றுதான் நிறைய விவாகரத்து வழக்குகள் இங்கு நடைபெறுகின்றன.

பெண்களுக்கான மதிப்பளிப்பது

பெண்களுக்கான மதிப்பளிப்பது

பொதுவாக ஒரு உறவில் உள்ளே செல்வதும் விரைவாக வெளியேறுவதும் ஆண்களுக்கு சாதாரண காரியம். ஆனால், பெண்களுக்கு அது சாதாரண காரியமல்ல. ஆண்கள் மிகவும் எளிதாக ஒரு உறவில் இருந்து விலகிச் செல்ல முடியும், ஏனெனில் அவர்களின் உணர்ச்சிகள் வேறுபட்டவை. ஆனால், ஒரு பெண் உடலுறவு கொள்ள விரும்புவதும் அதை மறந்துவிடுவதும் என்பது வழக்கத்திற்கு மாறானது. பெண்களுக்கான மதிப்பையும், அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்துகொண்டு ஆண்கள் நடந்துகொண்டால், கள்ள உறவுக்கு அவர்கள் செல்வதற்கான வாய்ப்பு குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, December 4, 2019, 13:30 [IST]
Desktop Bottom Promotion