Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
விவாகரத்து செய்ய பெரிய அளவில் ஜீவனாம்சம் கொடுத்த நடிகர்கள் - டாப் 10!
பெரிய அளவில் ஜீவனாம்சம் பெற்ற நடிகர்களின் மனைவிகள் - டாப் 10!
இங்கே முடிவிலியாய் தொடரும் பயணம் ஏதும் இல்லை. கடவுளே எத்தனை பிறவி எடுத்தாலும்... அதை அத்தனையையும் பூலோகத்திலேயே முடித்துக் கொண்டு தான் செல்கிறான். அப்படி இருக்கையில் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டலும், விவாகரத்து நீதி மன்றங்களில் தான் முடிங்கின்றன.
விவாகரத்து செய்வது அவ்வளவு எளிதல்ல... அதிலும் பிரபலங்கள் விவாகரத்து செய்வது மிகவும் கடுமையானது... மீடியாக்களின் வெளிச்சத்தில் இருந்து சில காலம் ஒதுங்கி இருக்க வேண்டும். ஒரே கேள்வியை கேட்டு, கேட்டு தொல்லை செயவ்வார்கள். இது போக பிரிந்த மனைவிக்கு நிச்சயம் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்.
அப்படி தங்கள் மனைவியை விவாகரத்து செய்ய பெருமளவு ஜீவனாம்சம் கொடுத்த பிரபலங்கள் தான் இவர்கள்...

ரூ. 400 கோடி!
இந்தியாவின் செக்ஸியான நடிகர் என்று பெயரெடுத்த ஹ்ரிதிக் ரோஷன் தனது தோழி சுசேனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கங்கனாவுடன் தொடர்பு இருப்பதாக அறிந்த சுசேன் ஹ்ரிதிக் ரோஷனை விட்டு பிரிந்தார்.
இவர் ஜீவனாம்சமாக ரூ.400 கோடிகள் கேட்டு, பிறகு இறுதியாக 380 கோடி பெற்றார் என்று அறியப்படுகிறது. இவர்கள் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மாதம் 10 இலட்சம்!
கரீனா கபூரின் சகோதரியான கரீஷ்மா கபூர் சஞ்சயை விவாகரத்து செய்த போது, குழந்தைகளுக்காக 14 கோடி ரூபாயும், மாதம் பத்து இலட்ச ரூபாய் ரொக்கமாக தர வேண்டும் கூற ஜீவனாம்சம் பேசப்பட்டதாக அறியப்படுகிறது.

பங்களா!
16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த பர்கான் அக்தர் தனது மனைவியை பிரிய பத்தாயிரம் சதுரடி கொண்ட பங்களாவை வழங்கியதாக அறியப்படுகிறது. மேலும், குழந்தைகள் வளர்ச்சிக்காக இன்வெஸ்ட் செய்ய வேண்டும் என்று பேசப்பட்டதாக அறியப்படுகிறது. விவாகரத்துக்கு பிறகு மனைவியிடம் பிள்ளைகள் வளர்ந்தாலும், தான் விரும்பும் போது பார்க்க அனுமதியும் பெற்றிருக்கிறார் பர்கான் அக்தர்.

அமீர் கான்!
நீண்ட கால திருமண பந்தத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த ஜோடிகளில் ஒருவர் அமீர். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய பெரிய அளவில் பணம் ஜீவனாம்சமாக கொடுத்ததாக கூறப்பட்டாலும், அந்த தொகை எவ்வளவு என்று தெளிவாக எங்கும் பதிவாகவில்லை.

சயப் அலிகான்!
13 ஆண்டுகால திருமண உறவு முறித்துக் கொண்டார் சயப் அலிகான். முதல் மனைவி அம்ரிதாவை விவாகரத்து செய்த பிறகு அவருக்கு ஜீவனாம்சமாக ஐந்து கோடி பேசப்பட்டது. ஆனால், அதில் 2.5 கோடி தான் சயப் அளித்துள்ளார்.
மேலும், தான் ஷாருக் போல பெரிய நடிகர் இல்லை என்றும். தனது மகன் 18 வயது அடையும் வரை மாதம் ஒரு இலட்ச ரூபாய் வழங்குகிறேன் என்றும் கூறிய சயப். மீத தொகையை விரைவில் தந்துவிடுவேன் என்றும் கூறியிருந்தார்.
தனது குழந்தைகளுக்கு எப்போது உதவி வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் சயப் அலிகான்.

சஞ்சய் தத்!
சஞ்சய் தத்தின் இரண்டாவது மனைவி தான் ரியா. இவரை பிரிந்ததற்காக சஞ்சய் வருத்தம் அடையவில்லை. மேலும், ரியா லியாண்டர் பயஸுடன் உறவில் இருந்தார் என்றும் அறியப்பட்டது. சஞ்சயிடம் இருந்து ஜீவனாம்சமாக எட்டு கோடி ரூபாயும், ஆடம்பர கார் ஒன்றும் பெற்றார் ரியா.

பிரபு தேவா!
இந்தியாவின் புகழ்பெற்ற நடன கலைஞர் பிரபு தேவா. இவரது மகனின் இறப்புக்கு பிறகு நயன்தாராவுடன் காதலில் இணைந்தார். அப்போது தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்த பிரபு தேவா அவருக்கு பத்து இலட்சம் ரொக்கமும், 20 -25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை எழுதிக் கொடுத்தார் என்றும் அறியப்படுகிறது.
ஆனால், இதன் பிறகு இவர் நயன்தாராவை திருமணம் செய்துக் கொள்ளாமலே பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லியாண்டர் பயஸ்!
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீரர் லியாண்டர் பயஸ், இவர் சஞ்சய் தத்தின் இரண்டாவது மனைவி ரியாவை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் ஒருசில வருடங்களில் பிரிந்தனர்.
பிரிவின் போது இவர்கள் மீடியா முன்னிலையில் கொஞ்சம் மோசமாகவே நடந்துக் கொண்டார்கள். மாதம் மூன்று இலட்சம் ரூபாய் போக, மகளின் படிப்பு செலவுக்கு 90 ஆயிரம் என்று மாதம் நான்கு இலட்சம் மொத்தம் ஜீவனாம்சமாக வேண்டும் என்று கேட்டிருந்தார் ரியா.



Click it and Unblock the Notifications











