Latest Updates
-
சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
அன்னையர் தினத்தில் பூக்களுக்குப் பதில் இதை கொடுங்க… அம்மாவின் ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் பலமடங்கு உயரும்! -
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சொந்த பேத்தியை திருமணம் செய்துக் கொண்ட தாத்தா, காதலுக்கு இதொரு தடையில்லையாம்!
ப்ளோரிடாவை சேர்ந்த மில்லியனர், மூன்றாவது மனைவியாக தனது சொந்த பேத்தியை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த 68 வயது மில்லியனர் சில மாதங்களுக்கு முன்னர் 24 வயது பெண் ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் இவர்களுக்குள் எழாத சந்தேகம், சில மாதங்கள் கழித்து தான் எழுந்தது. அதன் இறுதியில் தான் இருவரும் தாங்கள் தாத்தா பேத்தி உறவு முறை கொண்டவர்கள் என அறிந்தனர்.

மூன்றாவது திருமணம்!
ப்ளோரிடாவை சேர்ந்த அந்த மில்லியனர் ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று மூன்றாவது திருமணம் செய்துள்ளார். முதல் இரண்டு குடும்பங்களுடன் பெரிதாக தொடர்பு ஏதும் இல்லாமல் தான் வாழ்ந்து வந்துள்ளார் அந்த மில்லியனர்.

ஜாக்பாட்!
இரண்டாவது திருமணம் விவாகரத்து பெற்ற இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் அவருக்கு ஜாக்பாட் மூலம் மில்லியன் டாலர்கள் பணம் கிடைத்தது. இதன் மூலம் தான் அவர் பெரும் செல்வந்தர் ஆனார்.

ஆன்லைன் டேட்டிங்!
சமீபத்தில் தான் ஆன்லைன் மூலமாக டேட்டிங் செய்து வந்த 24 வயது பெண்ணை ப்ளோரிடா மில்லியனர் திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த பெண்ணும் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்பவர் தான். டீனேஜ் வயதிலேயே கருவுற்றதால் வீட்டை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ ஆல்பம்!
திருமண வாழ்வில் இணைந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த வந்த வாழ்வில் அதிர்ச்சியளித்தது ஒரு போட்டோ ஆல்பம். ஒரு போட்டோவில் அந்த பெண் தன் தந்தையின் புகைப்படம் கண்டு அதிர்ச்சி அடையவே... பிறகு விசாரித்த போது தான் தாங்கள் இருவரும் தாத்தா பேத்தி உறவு முறை கொண்டவர்கள் என இருவரும் அறிந்துள்ளனர்.

விவாகரத்து இல்லை!
தாத்தா, பேத்தி உறவுமுறை கொண்டவர்கள் என தெரிந்த பிறகும் கூட இருவரும் சேர்ந்து வாழவே விரும்புவதாக இருவரும் தெரிவிக்கின்றனர். உண்மையான காதலுக்கு தடைகள் ஏதுமில்லை என்கின்றனர் இந்த வினோத தம்பதியினர்.



Click it and Unblock the Notifications