Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சொந்த பேத்தியை திருமணம் செய்துக் கொண்ட தாத்தா, காதலுக்கு இதொரு தடையில்லையாம்!
ப்ளோரிடாவை சேர்ந்த மில்லியனர், மூன்றாவது மனைவியாக தனது சொந்த பேத்தியை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த 68 வயது மில்லியனர் சில மாதங்களுக்கு முன்னர் 24 வயது பெண் ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் இவர்களுக்குள் எழாத சந்தேகம், சில மாதங்கள் கழித்து தான் எழுந்தது. அதன் இறுதியில் தான் இருவரும் தாங்கள் தாத்தா பேத்தி உறவு முறை கொண்டவர்கள் என அறிந்தனர்.

மூன்றாவது திருமணம்!
ப்ளோரிடாவை சேர்ந்த அந்த மில்லியனர் ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று மூன்றாவது திருமணம் செய்துள்ளார். முதல் இரண்டு குடும்பங்களுடன் பெரிதாக தொடர்பு ஏதும் இல்லாமல் தான் வாழ்ந்து வந்துள்ளார் அந்த மில்லியனர்.

ஜாக்பாட்!
இரண்டாவது திருமணம் விவாகரத்து பெற்ற இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் அவருக்கு ஜாக்பாட் மூலம் மில்லியன் டாலர்கள் பணம் கிடைத்தது. இதன் மூலம் தான் அவர் பெரும் செல்வந்தர் ஆனார்.

ஆன்லைன் டேட்டிங்!
சமீபத்தில் தான் ஆன்லைன் மூலமாக டேட்டிங் செய்து வந்த 24 வயது பெண்ணை ப்ளோரிடா மில்லியனர் திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த பெண்ணும் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்பவர் தான். டீனேஜ் வயதிலேயே கருவுற்றதால் வீட்டை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ ஆல்பம்!
திருமண வாழ்வில் இணைந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த வந்த வாழ்வில் அதிர்ச்சியளித்தது ஒரு போட்டோ ஆல்பம். ஒரு போட்டோவில் அந்த பெண் தன் தந்தையின் புகைப்படம் கண்டு அதிர்ச்சி அடையவே... பிறகு விசாரித்த போது தான் தாங்கள் இருவரும் தாத்தா பேத்தி உறவு முறை கொண்டவர்கள் என இருவரும் அறிந்துள்ளனர்.

விவாகரத்து இல்லை!
தாத்தா, பேத்தி உறவுமுறை கொண்டவர்கள் என தெரிந்த பிறகும் கூட இருவரும் சேர்ந்து வாழவே விரும்புவதாக இருவரும் தெரிவிக்கின்றனர். உண்மையான காதலுக்கு தடைகள் ஏதுமில்லை என்கின்றனர் இந்த வினோத தம்பதியினர்.



Click it and Unblock the Notifications











