Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆண்களை கெஞ்ச வைக்க பெண்கள் செய்யும் சில தில்லாலங்கடி வேலைகள்!
அடம்பிடிப்பது பெண்களில் பிறப்புரிமை, இதை யாருக்காகவும் வாழ்க்கையின் எந்த தருணத்திலும் பெண்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அம்மா வீட்டில் அண்ணனுக்கு பிடித்த உணவை சமைப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதில் துவங்கி, கணவனிடம் சின்ன சின்ன விஷயத்திற்கும் முகத்தை திருப்புவது அவரை பெண்களின் அடம் பிடிக்கும் குணம் தொடர்கதையாக நீடிக்கும்.
இந்த ஆண் ஏமாற்றமாட்டார் என பெண்கள் கூறும் 7 அறிகுறிகள்!!!
பெரும்பாலும் பெண்களின் இந்த அடம்பிடிக்கும் குணம் அழகாக தான் இருக்கும். சின்ன கடைகளில் கை வளையல்கள் ஒன்றிரண்டு கூடுதலாக வாங்குவது, மல்லிகைப்பூ, சீரியல் பார்ப்பது என ஒருபக்கம் இருந்தாலும். சூழ்நிலை புரிந்துக் கொள்ளாமலும் சில சமயங்களில் பெண்கள் அடம்பிடிப்பது உண்டு. இதன் பிறகும் கேட்டது நடக்கும் வரை ஆண்களை கெஞ்ச வைக்க பெண்கள் சிலபல வேலைகளிலும் ஈடுபடுவர்கள்....
உறவில் அலுப்பு ஏற்பட்டது போல தோன்றுகிறதா? இந்த 5 வழிகளை முயற்சியுங்கள்!

முகத்தை தூக்கி வைத்துக் கொள்வது
என்ன பேச வந்தாலும், முக்கியமான விஷயங்கள், அன்பாக, நகைச்சுவையாக பேசினாலும் கூட பொது தேர்வில் தோல்வியுற்றது போல முகத்தை விட்டதைப் பார்த்து திருப்பிக் கொள்வார்கள்.கழுத்து மட்டும் 180 டிகிரி திரும்பியே காணப்படும்.

சமையலில் வெறுப்பை காட்டுவது
நமக்கு பிடிக்காத சமையல், உப்பு காரம் சரியாக இருக்காது. எண்ணெயும், கடுகும் சற்றே அதிகமாக தெறிக்கும்.

முக்கியமானவற்றை கூற மறுப்பது
பொதுவாகவே வீட்டில் கேஸ் தீர்ந்துவிட்டது, மளிகை பொருள் வாங்க வேண்டும். மாத தவணை போன்றவற்றை பெண்கள் தான் ஒவ்வொரு மாதமும் நினைவுப்படுத்துவார்கள். ஆனால், இந்த சமயங்களில் அவற்றை கூட கூற மாட்டார்கள்.

ஜாடையில் திட்டுவது
குழந்தையை அல்லது மூன்றாம் நபரை திட்டுவது போல சரமாரியான வசவுகள் கணவனுக்கு விழும். என்றோ ஆதிக் காலத்தில் செய்த தவறுகளை கூட நினைவுக் கூர்ந்து திட்டுவார்கள்.

கால் செய்து புலம்புவது
அம்மா, தோழி போன்றவர்களுக்கு இவர்களாக கால் செய்து, வேண்டாம் வெறுப்பாக பேசுவார்கள். அப்போது தானே அவர்கள் என்ன ஆச்சு என்று கேட்பார்கள். பிறகு இலைமறை காயாக உங்களை பற்றிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

விருந்தோம்பல்
பெண்கள் அனைவருமே நவரச திலகங்கள் தான். முகபாவனைகள் அவர்களது முகத்தில் பரதம் ஆடும். சிரிப்பில் கூட பல பாவங்கள் காட்டுவார்கள். நண்பர்கள் வீட்டிற்கு வரும் போது முகத்தில் வாய் மட்டும் தான் சிரிக்கும், கண், மூக்கு, ஜாடை எல்லாம் வெறுக்கும். அப்படிப்பட்ட சிரிப்பை பெண்களால் மட்டும் தான் சிரிக்க முடியும்.

சாக்குப்போக்கு
எந்த வேலை பற்றி கேள்விக் கேட்டாலும், எனக்கென்ன நாலு கையி, பத்து காலா இருக்கு என்பது போல ஏதேனும் ஒரு சாக்குப் போக்கு கூறுவார்கள்.

தாம்பத்தியத்திற்கு மறுப்பது
இது தான் டாப் கியர், உங்கள் மனைவி அடம்பிடித்து நீங்கள் அதை செய்ய மறுத்திருந்தால். எதற்கும் மசியமாட்டர்கள், இதற்கும் மசியமாட்டர்கள். கண்டிப்பாக இந்த நிலையில் ஆண்கள் அடத்திற்கு ஒப்புக்கொண்டு சண்டையை முடித்துக் கொள்ள கெஞ்ச ஆரம்பித்துவிடுவார்கள்.



Click it and Unblock the Notifications